எச்சரிக்கை! போலிக் கடவுச் சீட்டு, விசா வைத்திருந்தால் ஏழு ஆண்டு தண்டனை

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

புதுடில்லி, செப்.2 நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின்போது குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் சட்டம் நிறைவேற்றப்பட்டது. குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு பிறகு இந்த சட்டம் நேற்று (1.9.2025) முதல் நடைமுறைக்கு வந்தது. இது தொடர்பாக உள்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் நிதேஷ் குமார் வியாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

‘‘புதிய சட்டத்தின்படி இனிமேல் போலிக் கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) அல்லது விசாவை பயன்படுத்தி இந்தியாவிற்குள் நுழைவது அல்லது நாட்டிற்குள் தங்குவது அல்லது வெளியேறுவதற்கோ பயன்படுத்தினால் இரண்டு ஆண்டுகளுக்கு குறையாத , ஆனால் ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். மேலும் ஒரு லட்சம் ரூபாய்க்கு குறையாத ஆனால் ரூ.10லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். விடுதிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பிற கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் முதியோர் இல்லங்களில் வெளிநாட்டினரை குறித்த தகவல்களை கட்டாயமாக தெரிவிக்கவும் இந்த சட்டம் வழிவகை செய்கின்றது.

செல்லுபடியாகும் கடவுச்சீட்டு அல்லது பிற பயண ஆவணம் இல்லாமல் இந்தியாவின் எந்தவொரு பகுதிக்குள்ளும் நுழையும் எந்தவொரு வெளிநாட்டை சேர்ந்தவரும் சட்டத்தின் விதிகள் அல்லது அதன் அடிப்படையில் வழங்கப்பட்ட எந்தவொரு விதி அல்லது உத்தரவையும் மீறி நுழைபவர்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது ரூ.5லட்சம் வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும். வெளிநாட்டவர் அடிக்கடி செல்லும் இடங்களின் மீது கட்டுப்பாட்டை செலுத்தவும், வளாகத்தை மூடுவதற்கும் அல்லது அனுமதி மறுப்பதற்கும் ஒன்றிய அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *