மேனாள் குடியரசுத் துணைத் தலைவரின் பரிதாப நிலை! சட்டமன்ற உறுப்பினர் ஓய்வூதியம் பெற ஜகதீப் தன்கர் விண்ணப்பம்!

1 Min Read

புதுடில்லி, செப்.1- ஜூலை 21ஆம் தேதி, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளன்று எதிர்பாராத விதமாக தன்கர் பதவி விலகினார்.

உடல்நலக் காரணங் களுக்காகத் தான் பதவி விலகியதாக அவர் கூறினார். இருப்பினும், எதிர்க்கட்சித் தலைவர்கள் அவர் பதவி விலகச் செய்ய கட்டாயப் படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டினர்.

இதனையடுத்து, மேனாள் குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் எங்கிருக்கிறார்? ஜெகதீப் தன்கரின் உடல்நிலை எப்படி உள்ளது? என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.

இந்நிலையில், மேனாள் குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், மாதம் ரூ.42,000 சட்டமன்ற உறுப்பினர் ஓய்வூதியத்தை பெற ராஜஸ்தான் சட்டப் பேரவை செயலரிடம் விண்ணப்பித்துள்ளார்.

சட்டப்பேரவை செயலகம் இதற்கான செயல்முறையைத் தொடங்கியுள்ளதாகவும், குடியரசுத் துணைத் தலைவர் பதவி விலகிய தேதியிலிருந்து ஓய்வூதியம் பொருந்தும் என்று சட்டப் பேரவை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

1993 -1998 வரை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஜகதீப் தன்கரின் ஓய்வூதியம் 2019இல் மேற்கு வங்க ஆளுநராக நியமிக்கப்பட்டபோது நிறுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *