குரங்குகளுக்குப் பொங்கல், வடை கொடுப்பது சரியா? சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, செப்.1- ‘இயற்கையோடு இணைந்து வாழ வேண்டிய குரங்குகளுக்கு, பொங்கல், வடை என உணவளிப்பது சரியா?’ எனச் சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சோளிங்கர் கோயிலில் உள்ள குரங்குகளைப் பிடிக்கும் வனத்துறையின் நடவடிக்கைக்குத் தடை கோரிய மனுவுக்கு, மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் உள்ள சிறீ லட்சுமி நரசிம்மர் மற்றும் சிறீ ஆஞ்சநேயர் கோயில்கள் உள்ளன. ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ள மலை மற்றும் அதன் வளாகத்தில் ஏராளமான குரங்குகள் உள்ளன.

2018 முதல் கடிகாசல மாருதி டிரஸ்ட் பக்தர்களின் உதவியுடன் குரங்குகளுக்கு உணவு, குடிநீர் வழங்கி வருகிறதாம். இந்நிலையில், ஆகஸ்ட் 12-ஆம் தேதி, மாவட்ட வனத்துறை குரங்குகளைப் பிடித்து அங்கிருந்து அகற்றியது. எந்தவித முன்னறிவிப்பும் இன்றி மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது என்றும், பக்தர்களின் மத நம்பிக்கையைக் காயப்படுத்துவதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

நீதிபதி எழுப்பிய கேள்வி: இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், ‘இயற்கையோடு இணைந்து வாழும் குரங்குகளுக்குப் பொங்கல், வடை போன்ற உணவுகளை அளிப்பது சரியா?’ என மனுதாரர் தரப்பிடம் கேள்வி எழுப்பினார்.

மேலும், ‘பொங்கல், வடை போன்ற உணவுகளைச் சாப்பிட்டுப் பழகியதால், மனிதர்கள் வைத்திருக்கும் உணவுகளை அவை பறித்துச் செல்லும்’ என்றும் நீதிபதி கருத்துத் தெரிவித்தார்.

இந்த மனுவுக்கு இந்து சமய அறநிலையத் துறை ஆணையர், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர், வனத்துறை அதிகாரி ஆகியோர் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையைச் செப்டம்பர் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *