மேல் முறையீட்டு நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு
வாசிங்டன், செப்.1 அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலின்றி பல்வேறு நாடுகள் மீது அதிக வரிகளை விதித்த அதிபர் டிரம்பின் உத்தரவுகள் சட்டவிரோதமானவை என்று மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கூடுதல் வரிவி திப்பை நீக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. டிரம்ப் அரசு மேல் முறையீடு செய்ய அக்டோபர் 14-ஆம் தேதி வரை அவகாசம் தரப்பட்டுள்ளது.
அமெரிக்கப் பொருட்களுக்கு அதிக வரி விதிக்கும் நாடுகளுக்கு எதிராக வரிவிதிப்புக் கொள்கையை அமெரிக்கா கடைப்பிடிக்கும் என அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்தார். கனடா, மெக்சிகோ உட்பட உலகின் பல்வேறு நாடுகளுக்கும் கடும் இறக்குமதி வரிகளை விதித்துள்ளார். தனது இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், சீனா மீதான வரியை டிரம்ப் பல மடங்கு உயர்த்தினார். பின்னர், சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி, வரி விகிதத்தை குறைத்தார்.
இந்தியாவுக்கு 50 விழுக்காடு வரி விதிப்பு
அதேபோல, இந்தியப் பொருட் களுக்கு ஏற்கெனவே 25 விழுக்காடு வரி விதித்த டிரம்ப், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கு வதை காரணம் காட்டி, கூடுதலாக 25 விழுக்காடு வரியை விதித்து, இந்தியா வுக்கான வரியை 50 விழுக்காடாக உயர்த்தினார். இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. டிரம்பின் வரிவிதிப்பு நடவடிக்கையால், இந்தியாவில் தொழில்துறை கடும் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளது. தமிழ்நாட்டிலும் ஜவுளி, ஆடைகள், இயந்திரங்கள், ஆட்டோமொபைல், நகைகள், ரத்தினக் கற்கள், தோல் காலணிகள், கடல் பொருட்கள், ரசாயனங்கள் உள்ளிட்ட துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன. திருப்பூரின் ஏற்றுமதி வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க மக்களின் எதிர்ப்பு!
அமெரிக்காவிலும் இதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதிபர் டிரம்பின் நடவடிக்கைகளால், இறக்குமதி பாதிக்கப்படும். உள்நாட்டில் பொருட் களின் விலை உயரும். நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்று அமெரிக்க மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே, அதிபர் டிரம்பின் வரிவிதிப்பு முடிவுகளுக்கு எதிராக, நியூயார்க் வர்த்தக நீதிமன்றம் கடந்த மே மாதம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இதை எதிர்த்து அமெரிக்க கூட்டாட்சி மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் அமெரிக்க அரசு மேல்முறையீடு செய்திருந்தது. இந்நிலையில், மேல் முறையீட்டு நீதிமன்றம் இதில் நேற்று முன்தினம் (29.8.2025) முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது. தீர்ப்பில் கூறப்பட்டுள்ள தாவது: உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டுக்கு எதிராகவும் அதிபர் டிரம்ப் அதிக வரிகளை விதித்துள்ளார். இதை நியாயப்படுத்தவே, தேசிய அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. டிரம்பின் பெரும்பாலான வரிவிதிப்புகள் சட்டவிரோதமானவை. எனவே, கூடுதல் வரிவிதிப்பை நீக்க வேண்டும்.
அமெரிக்க அதிபருக்கு வரம்பற்ற அதிகாரம் கிடையாது
அடிப்படையில், வரிவிதிப்பு என்பது அமெரிக்க காங்கிரசின் (நாடாளுமன்றம்) அதிகாரத்துக்கு உட்பட்டது. வரிவிதிப்பில் அதிபருக்கு சில அதிகாரங்களை மட்டுமே நாடாளுமன்றம் வழங்கியுள்ளது. வரம்பற்ற அதிகாரத்தை அதிபருக்கு காங்கிரஸ் வழங்கவில்லை. அத்தகைய நோக்கத்தை காங்கிரஸ் கொண்டிருக்கவில்லை. இதை நினைவில் கொள்ள வேண்டும். இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.