எதிர்க் கட்சிகளின் கூட்டணி பிஜேபியை வீழ்த்தும் ராகுல் காந்தி உறுதி

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

அரசியல்

 நியூயார்க், ஜூன் 2 இந்தியாவில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண் டால் தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்த முடியும் என்று ராகுல்காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

அமெரிக்கா சென்றுள்ள ராகுல் காந்தி கலிபோர்னியா மாகாணம் சாந்தா கிளாராவில் இந்தியர்களி டையே உரையாற்றினார். அப் போது பேசிய அவர், “கருநாடக சட்டப்பேரவை தேர்தலில் பாஜ கவை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் அக்கட்சியை வீழ்த்தி வெற்றி பெற்றது. காங்கிரஸ் வெற்றி பெற்றதை மட்டுமே மக்கள் பார்த் தனரே தவிர நாங்கள் கையாண்ட உத்திகளை புரிந்து கொள்ளவில்லை. கருநாடக தேர்தலை முற்றிலும் மாறுபட்ட நிலையில், சந்தித்த காங்கிரஸ்,  தனித்துவ பிரச்சாரத்தை முன்னெடுத்தது. இந்தியாவில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண் டால் தேர்தலில் பாஜகவை வீழ்த்த முடியும். எதிர்க்கட்சிகளை ஒன்று சேர்க்கும் பணியில் காங்கிரஸ் ஈடு பட்டுள்ளது. அதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. நான் மேற் கொண்ட இந்திய ஒற்றுமை பயண அனுபவத்தை கொண்டு கருநாட கத்தில் தேர்தல் பிரச்சார உத்தி வகுக்கப்பட்டது. கருநாடக தேர்த லில் காங்கிரஸ் செலவிட்டதை விட, 10 மடங்கு பாஜக பணம் செலவிட்டது. இந்தியாவை ஆளும் பாஜகவை தோற்கடிக்க எதிர்க் கட்டிகள் ஒற்றுமை மட்டும் போதாது. மாற்றுப் பார்வை ஒன்றும் தேவைப் படுகிறது. ஒரு மாற்றுப்பார்வையை உருவாக்குவதில் நான் மேற் கொண்ட இந்திய ஒற்றுமை பயணம் முதல் அடி ஆகும். எதிர்க் கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை காங்கிரஸ் கட்சி தலைவர் முடிவு செய்வார். 

எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள்வதுடன் ஒரு புது பாதையை காட்ட உள்ளன என்பதையும் மக்களை உணரச் செய்ய வேண்டும். எந்த பிரிவைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், ஒவ்வொருவரின் குரலும் மதிக்கப்பட வேண்டும், கேட்கப்பட வேண்டும். இந்தியா வில் அரச அமைப்புகளை பயன் படுத்தி நாட்டு மக்களை பாஜக அச் சுறுத்தி வருகிறது. பாஜக ஆட்சியில் எதிர்க்கட்சிகள் அரசியல் ரீதியாக செயல்படுவது கடினமான காரிய மாகிவிட்டது. அரசியல் கட்சிகள் செயல்படுவதே கடினமானதாக ஆனதால்தான், இந்திய ஒற்றுமை பயணத்தை மேற்கொண்டேன். மக் களுடன் தொடர்பு கொள்வதற்கான ஊடகங்கள் அனைத்தையும் பாஜக வும், ஆர்.எஸ்.எசும் தம் கட்டிப் பாட்டில் கொண்டுள்ளது. பாஜக ஆட்சியில் ஊடகங்களால் கட்டுப் படுவது இந்தியாவின் உண்மையான சித்திரம் அல்ல. இந்தியாவில் நில வாத ஒரு அரசியல் பிம்பத்தை பாஜக அதரவு ஊடகங்கள் சித் தரிக்கின்றன” என்றார். 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *