இலங்கை நீதிமன்றம் உத்தரவு: ராமேஸ்வரம் மீனவர்கள் இருவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை; 5 பேருக்கு ரூ. 25 லட்சம் அபராதம்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

ராமேஸ்வரம், ஆக. 31– ஜூன் 30-ஆம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற ஏழு மீனவர்களுக்கு, இலங்கை மன்னார் நீதிமன்றம் நேற்றுத் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. இரு வருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையும், மற்ற அய்ந்து பேருக்கு ரூ25 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

சசிகுமார் (38) மற்றும் சீனிமாலிக் (42) ஆகிய இருவர், இரண்டாவது முறையாக எல்லை தாண்டி மீன்பிடித்ததால், அவர்களுக்குத் தலா இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

மற்ற அய்ந்து மீனவர்களுக்கும் தலா ரூ 5 லட்சம் வீதம் ரூ.25 லட்சம் (இந்திய மதிப்பில் சுமார் ரூ 7.25 லட்சம்) அபராதம் விதிக் கப்பட்டுள்ளது. இந்த அபராதத்தைச் செலுத்தத் தவறினால், அய்ந்து பேரும் தலா ஓராண்டு சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த ஏழு மீனவர்களும் விடுவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், இந்தத் தண்டனை அவர்களின் குடும்பத்தினரிடையே பெரும் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க ஒன்றிய அரசிடம் கோரிக்கை வைக்கப் பட்டிருந்த நிலையில், இந்தத் தீர்ப்பு வெளியாகியுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *