இலங்கை நீதிமன்றம் உத்தரவு: ராமேஸ்வரம் மீனவர்கள் இருவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை; 5 பேருக்கு ரூ. 25 லட்சம் அபராதம்

1 Min Read

ராமேஸ்வரம், ஆக. 31– ஜூன் 30-ஆம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற ஏழு மீனவர்களுக்கு, இலங்கை மன்னார் நீதிமன்றம் நேற்றுத் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. இரு வருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையும், மற்ற அய்ந்து பேருக்கு ரூ25 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

சசிகுமார் (38) மற்றும் சீனிமாலிக் (42) ஆகிய இருவர், இரண்டாவது முறையாக எல்லை தாண்டி மீன்பிடித்ததால், அவர்களுக்குத் தலா இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

மற்ற அய்ந்து மீனவர்களுக்கும் தலா ரூ 5 லட்சம் வீதம் ரூ.25 லட்சம் (இந்திய மதிப்பில் சுமார் ரூ 7.25 லட்சம்) அபராதம் விதிக் கப்பட்டுள்ளது. இந்த அபராதத்தைச் செலுத்தத் தவறினால், அய்ந்து பேரும் தலா ஓராண்டு சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த ஏழு மீனவர்களும் விடுவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், இந்தத் தண்டனை அவர்களின் குடும்பத்தினரிடையே பெரும் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க ஒன்றிய அரசிடம் கோரிக்கை வைக்கப் பட்டிருந்த நிலையில், இந்தத் தீர்ப்பு வெளியாகியுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த விடுதலை வாசகர்களே, சகோதர, சகோதரிகளே, பெரியார் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேட்டாக திகழ்ந்து வரும் "விடுதலை" நம்முடையது.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம், ஒரு கருவி. இந்த விடுதலைப் பணியைத் தொடர, ஒலிக்க வைக்க, உங்கள் பொருளாதார பங்களிப்பு அத்தியாவசியமானது. பெரியார் விதைத்த பகுத்தறிவின் விதையை, நீங்கள் உரமிட்டு வளர்க்க வேண்டுகிறோம். உங்கள் நன்கொடையை அனுப்பவும். விடுதலைக்கு உரமிடுங்கள்!

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. ஒவ்வொரு ரூபாயும் பகுத்தறிவின் சுடரை ஒளிர வைக்கும்.

பெரியார் வாழ்க! விடுதலை வளர்க!

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *