கடலூர், ஆக.31- கடலூர் மாவட்டம் காட்டுக் கூடலூரை சேர்ந்தவர் இருசப்பன். தச்சுத்தொழிலாளி. இவரது மனைவி லதா. இந்த இணையருக்கு 4 மகள்கள், 3 மகன்கள் உள்ளனர். இதில் இளைய மகன் ராமஜெயம் (வயது 17). இவர் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் (27.8.2025) மாலை, அந்த கிராமத்தில் உள்ள பாலமுருகன் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. இதற்காக கோவில் அருகில் உள்ள மேடையில் விநாயகர் சிலை நிறுவப்பட்டு செய்யப்பட்டு வழிபாடு நடந்தது. விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதை ஒலிப்பெருக்கியில் அறிவிக்கும் வகையில் ராமஜெயம், அங்கிருந்த ‘மைக்’கில் பேசினார். அப்போது எதிர்பாராதவிதமாக ‘மைக்’ வழியாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட ராமஜெயம் பரிதாபமாக உயிரிழந்தார்.
விக்னத்தைத் தீர்க்கவில்லை உயிரைத் தீர்த்த விநாயகர் சதுர்த்தி : மின்சாரம் தாக்கி 12ஆம் வகுப்பு மாணவர் பலி
1 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த விடுதலை வாசகர்களே, சகோதர, சகோதரிகளே,
பெரியார் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேட்டாக திகழ்ந்து வரும் "விடுதலை" நம்முடையது.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம், ஒரு கருவி. இந்த விடுதலைப் பணியைத் தொடர, ஒலிக்க வைக்க, உங்கள் பொருளாதார பங்களிப்பு அத்தியாவசியமானது. பெரியார் விதைத்த பகுத்தறிவின் விதையை, நீங்கள் உரமிட்டு வளர்க்க வேண்டுகிறோம்.
உங்கள் நன்கொடையை அனுப்பவும். விடுதலைக்கு உரமிடுங்கள்!
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. ஒவ்வொரு ரூபாயும் பகுத்தறிவின் சுடரை ஒளிர வைக்கும்.
பெரியார் வாழ்க! விடுதலை வளர்க!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books