அரியலூர், ஆக. 31- தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தினால் (2025-2026) ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப்போட்டிகள் 26/08/2025 முதல் 08/09/2025 வரை அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைப்பெற்று வருகிறது.
இதில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு 12 வயது முதல் 19 வயது வரை வயது வரம்பு பிரிக்கப்பட்டது .இதில் 26/08/2025 அன்று நடைபெற்ற கூடைப்பந்து போட்டி ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மாணவர்கள் கலந்து கொண்டு மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பிடித்து வெற்றி பெற்றனர்.
குழு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு இரண்டாம் பரிசாக மொத்தம் ரூபாய் 24,000 வங்கியின் மூலம் செலுத்தப்படும். மேலும் இதில் பன்னிரண்டாம் வகுப்பை சேர்ந்த என்.மணிஷ்குமார், எஸ்.அகிலன் ஆகிய இருவரும் மாநில அளவில் நடைபெறும் முதலமைச்சர் போட்டிக்கு விளையாட தகுதி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
போட்டியில் வென்ற வீரர்கள் மற்றும் பயிற்றுவித்த உடற்கல்வி ஆசிரியர்கள் ராஜேஷ் ரவிசங்கர் மற்றும் ரஞ்சனி ஆகியோரை பள்ளி தாளாளர் ,முதல்வர் ஆர்.கீதா, இருபால் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் உட்பட பலர் வாழ்த்தினர்.