ஜெர்மனி வாழ் தமிழர்களுடன் சந்திப்பு; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!

1 Min Read

பெர்லின், ஆக.31 ஜெர்மனி வாழ் தமிழர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசினார். அவர், ‘‘தமிழ் மக்களின் பாசத்தைக் கண்டு நெகிழ்ச்சி அடைந்தேன்” என தெரி வித்துள்ளார்.

தமிழ்நாட்டிற்குத் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு ஒரு வார சுற்றுப்பயணமாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (30.8.2025) சென்னையில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.

அவர் இன்று (31.8.2025) ஜெர்மனி சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இது தொடர்பாக தமிழர்கள் வரவேற்ற ஒளிப்படத்தை முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘ஜெர்மனியின் டியோட்ஸ்லாந்த் நகரில் தமிழர்களின் குடும்பத்தினரை சந்தித்தேன். தமிழ் மக்களின் பாசத்தைக் கண்டு நெகிழ்ச்சி அடைந்தேன்.

தமிழ்நாட்டின் சாதகமான அம்சங்களை எடுத்துக் கூறி முதலீடுகளை ஈர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.

வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்துப் பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்குவேன்” என குறிப்பிட்டுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த விடுதலை வாசகர்களே, சகோதர, சகோதரிகளே, பெரியார் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேட்டாக திகழ்ந்து வரும் "விடுதலை" நம்முடையது.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம், ஒரு கருவி. இந்த விடுதலைப் பணியைத் தொடர, ஒலிக்க வைக்க, உங்கள் பொருளாதார பங்களிப்பு அத்தியாவசியமானது. பெரியார் விதைத்த பகுத்தறிவின் விதையை, நீங்கள் உரமிட்டு வளர்க்க வேண்டுகிறோம். உங்கள் நன்கொடையை அனுப்பவும். விடுதலைக்கு உரமிடுங்கள்!

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. ஒவ்வொரு ரூபாயும் பகுத்தறிவின் சுடரை ஒளிர வைக்கும்.

பெரியார் வாழ்க! விடுதலை வளர்க!

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *