பற்றாக்குறை – பட்டினி

1 Min Read

புதுடில்லி, ஜூன் 3- கடந்த 2022-2023 நிதியாண் டுக்கான ஒன்றிய அரசின் நிதிப் பற்றாக் குறை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.4 சதவீதமாக இருக்கும் என, அரசு தரவுகள் தெரிவிக்கின்றன. கடந்த நிதியாண்டில், ஒன்றிய அரசின் நிதிப் பற்றாக்குறை, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.4 சதவீதமாக இருக்கும் என, நிதியமைச்சகத்தின் திருத்தப்பட்ட பட்ஜெட் மதிப் பீட்டில் கணிக்கப் பட்டு உள்ளதாக, ஒன்றிய தலைமை கணக்கு தணிக்கை அலுவலகம் தெரிவித்துள்ளது. கடந்த நிதியாண்டுக்கான, ஒன்றிய அரசின் வருவாய் மற்றும் செலவு குறித்த தரவுகளை வெளியிட்டுள்ள தலைமை கணக்கு தணிக்கை அலுவலகம், நிதிப் பற்றாக்குறை 17.33 லட்சம் கோடி ரூபாயாக கணக் கிடப்பட்டு உள்ளதாகவும், இது தற்காலிக மதிப்பீடே என்றும் தெரிவித்துள்ளது. 

அரசாங்கம் தன் நிதிப்பற்றாக்குறையை சமாளிக்க, சந்தையில் இருந்து கடன் வாங்குகிறது. நாட்டின் வருவாய் பற்றாக்குறை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.9 சதவீதமாகவும், பயனுள்ள வருவாய் பற்றாக்குறை, மொத்த உள்நாட்டு உற் பத்தியில் 2.8 சதவீதமாகவும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த பிப்ரவரி ஒன்றாம் தேதி, மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த ஒன்றிய நிதிநிலை அறிக்கையில்  2023-2024ஆம் நிதியாண்டுக்கான நிதிப் பற்றாக்குறை இலக்கு, மொத்த உள் நாட்டு உற்பத்தியில் 5.9 சதவீதமாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *