வாக்குத் திருட்டை எதிர்த்து பயணம் ஒன்றிய அரசுக்கு சச்சின் பைலட் எழுப்பும் மூன்று கேள்விகள்

1 Min Read

பாட்னா, ஆக 30  பீகாரில் காங்கிரஸ், ஆர்ஜேடி இணைந்து நடத்தும் வாக்காளர் அதிகார பயணத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் சச்சின் பைலட் பங்கேற்றார். மேற்கு சம்பரன் மாவட்டத்தில் அவர் பேசும்போது ஒன்றிய அரசுக்கு 3 கேள்விகளை முன்வைத்தார்.

“தலைமை தேர்தல் ஆணையரை தேர்வு செய்யும் நடைமுறையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை நீக்கியது ஏன்? தேர்தல் நடைமுறைக்கு 45 நாட்களுக்கு பிறகு வாக்குச் சாவடி சிசிடிவி பதிவுகள் அழிக்கப்படும் என முடிவை எடுத்தது யார்?, காங்கிரஸ் கட்சிக்கு வாக்காளர் பட்டியலை வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட அதே நாளில் வாக்காளர் பட்டியலை வழங்க தேர்தல் ஆணையம் கடமைப்படவில்லை என்று விதி மாற்றப்பட்டது ஏன்? இதற்கான அறிவுறுத்தலை அளித்தது யார்?” என்று சச்சின் பைலட் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த விடுதலை வாசகர்களே, சகோதர, சகோதரிகளே, பெரியார் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேட்டாக திகழ்ந்து வரும் "விடுதலை" நம்முடையது.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம், ஒரு கருவி. இந்த விடுதலைப் பணியைத் தொடர, ஒலிக்க வைக்க, உங்கள் பொருளாதார பங்களிப்பு அத்தியாவசியமானது. பெரியார் விதைத்த பகுத்தறிவின் விதையை, நீங்கள் உரமிட்டு வளர்க்க வேண்டுகிறோம். உங்கள் நன்கொடையை அனுப்பவும். விடுதலைக்கு உரமிடுங்கள்!

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. ஒவ்வொரு ரூபாயும் பகுத்தறிவின் சுடரை ஒளிர வைக்கும்.

பெரியார் வாழ்க! விடுதலை வளர்க!

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *