அட அண்டப் புளுகு! ஆகாசப் புளுகே!! ‘இந்தியாவில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே விமானம் இருந்ததாம்!’ -சிவராஜ் சிங் சவுகான்

1 Min Read

போபால், ஆக.29 மகாபாரத காலத்திலேயே மேம்பட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த இந்தியா கற்றுக்கொண்டது என ஒன்றிய பா.ஜ.க. அமைச்சர் சிவராஜ் சிங் கூறியுள்ளார்.

போபாலில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி மய்யத்தில் நடை பெற்ற நிகழ்ச்சியில், மத்திய பிரதேச மாநிலத்தின் மேனாள் முதலமைச்சரும், ஒன்றிய பா.ஜக. அமைச்சருமான சிவராஜ் சிங் சவுகான் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

“ரைட் சகோதரர்களுக்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் ‘புஷ்பக விமானம்‘ இருந்தது. மகாபாரத காலத்திலேயே டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளைப் போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த இந்தியா கற்றுக்கொண்டது. ஜான் டால்டனுக்கு முன்பே மகரிஷிகள் அணுக்கோட்பாட்டை முன்வைத்தனர். நமது நாட்டின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே வளர்ந்துவிட்டது.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதைத்தான் அண்டப் புளுகு! ஆகாசப் புளுகு!! என்று சொல்வார்கள்!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *