பூனைக்குட்டி வெளியில் வந்தது “அ.தி.மு.க.வை ஆர்.எஸ்.எஸ். வழிநடத்துவதில் என்ன தவறு?” ஒன்றிய அமைச்சர் எல். முருகன் கேள்வி

1 Min Read

சென்னை, ஆக.29 “அ.தி.மு.க.வை ஆர்.எஸ்.எஸ். வழிநடத்துகிறது” என்ற விஜயின் விமர்சனத்துக்கு, ஒன்றிய இணை அமைச்சர் எல். முருகன் பதிலடி கொடுத்துள்ளார். “ஆர்.எஸ்.எஸ். ஒரு சமூக சேவை இயக்கம், அதன் கொள்கைகளை அ.தி.மு.க. கேட்பது வரவேற்கத்தக்கது. விஜயும் ஆர்.எஸ்.எஸ்சிடம் கற்றுக்கொள்ள வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.

சென்னை கோயம்பேட்டில் உள்ள குடியிருப்புப் பகுதியில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட எல். முருகன், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

பா.ஜ.க.வை போல் அ.தி.மு.க.வையும் ஆர்.எஸ்.எஸ். வழிநடத்துவதாக விஜய் கூறியது குறித்த கேள்விக்கு, எல். முருகன், “ஆர்.எஸ்.எஸ். என்பது சமூக சேவைக்கான இயக்கம், இது நூற்றாண்டு கண்ட இயக்கம். இந்த இயக்கம் குறித்து ஜவஹர்லால் நேரு, அம்பேத்கர் போன்ற தலைவர்களும் ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சிகளிலும் விருந்தினர்களாகக் கலந்துகொண்டுள்ளனர்” என்று கூறினார்.

“அரசியல் கட்சிகளை நல்வழிப்படுத்தும் அனைத்து கொள்கைகளையும் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் கொண்டுள்ளது. அப்படிப்பட்ட இயக்கம் அ.தி.மு.க.வை வழிநடத்தினால் என்ன தவறு? முதலில் விஜய்தான் ஆர்.எஸ்.எஸ்.இல் சேர்ந்து அரசியல் தெளிவு பெற வேண்டும், அதன் கொள்கைகள் மூலம் அரசியல் கற்றுக் கொள்ள வேண்டும்” என்றும் அவர் தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த விடுதலை வாசகர்களே, சகோதர, சகோதரிகளே, பெரியார் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேட்டாக திகழ்ந்து வரும் "விடுதலை" நம்முடையது.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம், ஒரு கருவி. இந்த விடுதலைப் பணியைத் தொடர, ஒலிக்க வைக்க, உங்கள் பொருளாதார பங்களிப்பு அத்தியாவசியமானது. பெரியார் விதைத்த பகுத்தறிவின் விதையை, நீங்கள் உரமிட்டு வளர்க்க வேண்டுகிறோம். உங்கள் நன்கொடையை அனுப்பவும். விடுதலைக்கு உரமிடுங்கள்!

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. ஒவ்வொரு ரூபாயும் பகுத்தறிவின் சுடரை ஒளிர வைக்கும்.

பெரியார் வாழ்க! விடுதலை வளர்க!

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *