சென்னை, ஆக. 27– மாநகர போக்குவரத்துக் கழகத்தில், தொழிற்பழகுநர் பயிற்சியில் சேருவதற்கான முகாம், வரும் 10ஆம் தேதி நடைபெறுகிறது.
இது தொடர்பாக, மாணவர்களுக்கு அழைப்பு விடுத்து, மாநகர போக்குவரத்துக் கழக உதவி மேலாளர் சென்னையில் உள்ள தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
மாநகர போக்குவரத்துக் கழகத்தில் அய்டிஅய் பிரிவில் தொழில் பழகுநர் பயிற்சிக்கு 500 பேர் தேவைப்படுகிறார்கள். அதன்படி, மெக்கானிக், எலக்ட்ரீஷியன், வெல்டர், ஃபிட்டர் ஆகிய பிரிவுகளில் சேருவோருக்கு மாதம் ரூ.14 ஆயிரம் ஊக்கத் தொகையாக வழங்கப்படும். இந்தப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு, வரும் 10ஆம் தேதி காலை 10 மணியளவில் சென்னை, குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்துக் கழக தொழிற்பயிற்சி பள்ளியில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் மாணவர்களை கலந்துகொள்ளச் செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.