சென்னை, ஆக. 27- தமிழ்நாட்டிற்கு முதலீட்டை ஈர்க்கும் நோக்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 30ஆம் தேதி ஜெர்மனி செல்கிறார். அவரது பயண விவரம் வெளியாகியுள்ளது.
அதன்படி 30ஆம் தேதி காலையில் சென்னை விமான நிலையத்தில் இருந்து ஜெர்மனி புறப்படுகிறார். 31ஆம் தேதி அங்கு ஜெர்மனி அயலக அணி நிர்வாகிகளை சந்திக்கிறார். செப்டம்பர் 1ஆம் தேதி ஜெர்மனியில் இருந்து லண்டனுக்கு புறப்பட்டு செல்கிறார். 2 அல்லது 3ஆம் தேதியில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில், தொழில் முனைவோ-ரை சந்தித்து உரையாடுகிறார்.
4ஆம் தேதியன்று ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் அயலக தமிழர் நல வாரியத்துடனான நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. 6ஆம் தேதியில் லண்டனில் உள்ள தமிழர் நல வாரியத்தின் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. 7ஆம் தேதி மாலை அங்கிருந்து புறப்படுகிறார். செப்டம்பர் 8ஆம் தேதி அதிகாலை சென்னை விமான நிலையத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிறார்.