குருவாயூர் கோயில் குளத்தில் மாற்று மதத்தைச் சேர்ந்த பெண் இறங்கிவிட்டாராம் : கொதிக்கிறது ஒரு கும்பல்

1 Min Read

 குருவாயூர், ஆக.27  கேரள மாநிலம் குருவாயூரில்  கிருஷ்ணர் கோயில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும்  பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர். இந்நிலையில் இந்தக் கோயிலின் ‘புனித’ குளத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் ஜாஸ்மின் ஜாபர் என்ற யூ டியூபர் குருவாயூர் ரீல்ஸ் பதிவு செய்து வெளியிட்டாராம்.

சமூக வலைதளத்தில் பிரபலமாக உள்ள ஜாஸ்மின் ஜாபர், கேரள பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றவர். குருவாயூர் கோயிலில் இந்து அல்லாத பிற மதத்தவர்களுக்கு அனுமதி கிடையாதாம். இந் நிலையில் ஜாஸ்மின் ஜாபர், கோயில் குளத்தில் இறங்கி ரீல்ஸ் பதிவு செய்து வெளியிட்டது பக்தர்கள் மத்தியில்  கொந்தளிப்பை ஏற்படுத்தி விட்டதாம். கோயில் குளத்தின் ‘புனித’த்தன்மை கெட்டுவிட்டதாக பக்தர்கள் புகார் செய்தனராம்.

இதைத் தொடர்ந்து கோயில் நிர்வாகம் சார்பில் பரிகார பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. நேற்று (26.8.2025) காலை முதல் கோயிலில் வெவ்வேறு வகையான பரிகார பூஜைகள் நடந்து வருகின்றன. இதனால் நேற்று  (26.8.2025) பிற்பகல் வரை பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. ஆறு நாட்களுக்கு இந்த பூஜை தொடரும் என்று கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. பரிகார பூஜை நடக்கும் நேரத்தில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றும், பக்தர்கள் அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் கோயில் நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளதாம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *