மோடி அரசுக்கு சட்ட ஆணைய தலைவர் ஆபத்தான பரிந்துரை

Viduthalai
3 Min Read

 தேசத் துரோக சட்டப்பிரிவு 124ஏ-வை ரத்து செய்யக் கூடாது; குறைந்தது 7 ஆண்டாவது சிறையில் தள்ள வேண்டுமாம்!

புதுடில்லி, ஜூன் 4 – “தேசத்துரோக சட்டத் தின் பிரிவு ‘124ஏ’  கட்டாயம் தேவை” என்று இந்திய சட்ட ஆணை யத்தின் தலைவர் ரிது ராஜ் அவஸ்தி, ஒன்றிய அரசுக்குப் பரிந்துரை அளித்துள்ளார். 

அதுமட்டுமல்லாமல், தற்போது வழங் கப்பட்டு வரும் 3 ஆண்டு தண்டனையை 7 ஆண்டுகளாகவோ அல்லது அதற்கும் அதிக மாக இரட்டைப்படையிலோ அதிகரிக்க வேண்டும் என்றும் ஆபத்தான யோச னைகளை ரிது ராஜ் அவஸ்தி வழங்கியுள்ளார். 

இந்திய நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டு களாகி விட்ட நிலையிலும், ஆங்கிலேய கால னிய ஆட்சியின் எச்சமாக இருக்கும் ‘தேசத் துரோக’ சட்டப்பிரிவு 124ஏ தேவையா? என்பது  அவ்வப்போது முன்னெழும் விவாதமாக இருக்கிறது.  

தேசத் துரோக சட்டத்தின் 124ஏ பிரிவு, கருத்துரிமையை நசுக்குவதாக சமூக செயற்  பாட்டாளர்கள், எதிர்க்கட்சியினர் உள்ளிட் டோர் தொடர்ந்து விமர்சனங் களை வைத்து வருகின்றனர். இதனை நீக்குவது தொடர்பாக நீதி மன்றங்களில் வழக்குகளும் தொடுக்கப்பட்டு உள்ளன.

உச்சநீதிமன்றமும், இதுதொடர்பாக 2021-ஆம் ஆண்டு ஒன்றிய அரசுக்கு தாக்கீது அனுப்பியிருந்தது. அதில், தேசத்துரோகச் சட்டப்பிரிவு 124ஏ வேண்டுமா? என்றும் கேள்வியெழுப்பி இருந்தது. இதுதொடர் பாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்த ஒன்றிய அரசு, அதில், “பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அரசு இதுபோன்ற 1,500 சட்டப் பிரிவுகளை நீக்கியுள்ளது. இதனால் சுமார் 25 ஆயிரம் வழக்குகள் முடித்து வைக்கப்  பட்டன. அதேபோல இந்த 124ஏ சட்டப் பிரிவை  நீக்குவது குறித்தும் ஆலோசனை மேற் கொண்டு வருகிறது” என்று கூறியிருந்தது. 

2022 மே மாதம் இந்த விவகாரத்தில் தீர்ப்ப ளித்த- அன்றைய தலைமை நீதிபதி என்.வி.  ரமணா தலைமையிலான 3 நீதிபதிகளைக் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு, ஒன்றிய அரசு முடிவெடுக்கும் வரை, இந்திய தண்டனைச் சட்டத்தில் உள்ள 124கி என்ற தேசத் துரோக சட்டப் பிரிவில் வழக்குப்பதிவு செய்யக்  கூடாது என உத்தரவிட்டது. ஏற்கெனவே, தேசத்  துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை யில் இருப்பவர்கள் பிணை கோரலாம் என்றும் கூறியது. 

இந்தப் பின்னணியில், ‘124ஏ’ சட்டப்பிரி வின் தேவை குறித்து ஆராயுமாறு இந்திய சட்ட ஆணையத்தின் தலைவரும், கருநாடக உயர் நீதிமன்றத்தின் மேனாள் தலைமை நீதி பதியுமான ரிது ராஜ் அவஸ்தியை, 2016-ஆம்  ஆண்டே மோடி அரசு கேட்டுக் கொண்டிருந் தது. 

இந்நிலையில்தான், “தேசத் துரோக சட்டத்தின் பிரிவு 124ஏ கட்டாயம் தேவை” என்று 22-ஆவது சட்ட ஆணையத்தின் தலைவர் ரிது  ராஜ் அவஸ்தி ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது: 

“இந்திய தண்டனைச் சட்டத்தில் 124ஏ பிரிவைத் தக்க வைத்துகொள்ள வேண்டும். இருப் பினும் இதில் சில திருத்தங்கள் அவசியமா கிறது. அதாவது குறைந்தபட்ச தண்டனை 3 ஆண்டுகளாக இருக்கிறது. அதேபோல அதிக பட்சமாக ஆயுள் தண் டனை இருக்கிறது. இதில் இந்த குறைந்தபட்ச தண்டனைக்கான ஆண்டுகளை ஒற்றைப் படையிலிருந்து இரட் டைப்படைகளாக மாற்ற வேண்டும். அல்லது 7 ஆண்டுகளாக உயர்த்தப்பட வேண்டும். இந்த சட்டத்தின் கீழ் பலர் தவறாக தண்டிக் கப்பட்டுள்ளனர் என்பதை மறுக்க முடியாது. எனவே இதனை தடுக்க ஒன்றிய அரசு மாதிரி வழி காட்டுதல்களை வெளியிட வேண்டும். 124ஏ சட்டப்பிரிவு ‘காலனித்துவ மரபு’ என்கிற ஒற்றை காரணத்திற்காகவே அதனை ரத்து செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஒருவேளை இந்த சட்டப்பிரிவு இல்லாமல் போய்விட்டது எனில், அரசுக்கு எதிராக வன்முறையை தூண்டுபவர்களை கைது செய்ய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங் களைதான் பயன்படுத்த வேண்டியிருக்கும். இது 124ஏ சட்டப் பிரிவைவிட கொடூர மானதாகும். மற்ற நாடுகள் இதுபோன்ற சட்டங்களை நீக்கிவிட்டது என்பதற்காக இந்தியாவும் அப்படி செய்ய வேண்டிய அவசியமில்லை. மேலும், இப்படி செய்வது உண் மைக்கு புறம்பானதாக இருக்கும். மட்டுமல்லாது நீதிமன்றம் தனது பொன் னான நேரத்தில் இதில் செலவிட வேண்டாம்.”  இவ்வாறு ரிது ராஜ் அவஸ்தி கூறியுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *