சாராயம் குடித்து பூசாரி சாவு பக்தி போதை ஏறியதோ!

1 Min Read

மேலூர், ஜூன் 4 கிடாரிப்பட்டியில் நான்கு பேர், ‘டாஸ்மாக்’கில் மது வாங்கி குடித்த நிலையில், கோவில் பூசாரி ஒருவர் இறந்தார். இருவர் சிகிச்சையில் உள்ளனர்.

மதுரை மாவட்டம், கிடாரிப்பட்டி பனையன் 45, பெரியநாச்சியம்மன் கோவில் பூசாரியாக இருந்தார். கோவிலில் பெயின்ட் அடிக்கும் வேலை நடக்கிறது. பனையன் உறவினர் வீரணன் உள்ளிட் டோர் இப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 2.6.2023 அன்று  வீரணன் கிடாரிப்பட்டி டாஸ்மாக் கடை யில் மது வாங்கினார். அவருடன் பனையன், கருவா மொண்டி, வீரணன் மற்றும் 16 வயது சிறுவன் கோவில் எதிரே அமர்ந்து மது அருந்தினர். சிறிது நேரத்தில் பனையன் வாயில் நுரையுடன் மயக்க மடைந்தார்.

வீரணன் தவிர மற்றவர்களும் மயக்க மடைய, அங்கிருந்தவர்கள் மேலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பனையனின் உடல் நிலை மோசமடையவே, மேல் சிகிச்சைக்காக மதுரை கொண்டு செல்லும் வழியில் அவர் இறந்தார். கருவா மொண்டி மதுரை அரசு மருத்துவமனை யிலும், சிறுவன் மேலூர் அரசு மருத்துவ மனையிலும் சிகிச்சையில் உள்ளனர். வீரணனிடம் மதுரை மாவட்ட காவல் துறை தலைவர்  பொன்னி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் விசாரித்தனர். சம்பவ இடத்தில் மேலாதிக காவல் கண்காணிப்பாளர் கருப்பையா, தாசில்தார் செந்தாமரை விசாரித்தனர். மேலவளவு காவல்துறையினர் மதுக் கடையில் வீரணன் மது வாங்கி சென்ற, ‘சிசிடிவி’ காட்சிகளை ஆய்வு செய்தனர். வீரணன் மது வாங்கிக் கொடுத்ததும் அங்கிருந்து கிளம்பியதாக கூறுகிறார். ஆனால், வீரணனும் சேர்ந்து குடித்ததாக கருவா மொண்டியும், 16 வயது சிறுவனும் கூறுகின்றனர். மது போதையில் தண்ணீ ருக்கு பதிலாக வீரணன், தவறுதலாக பெயின்ட் வேலைக்கு பயன்படுத்தும் தின் னரை கலந்து கொடுத்தாரா என்ற கோணத் தில் விசாரிக்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *