விநாயகருக்கா இந்த கதி? விநாயகர் சிலைகள் ஆந்திராவிற்கு திருப்பி அனுப்பப்பட்டன

1 Min Read

வேலூர், ஆக.26- விநாயகர் சதுர்த்தி விழா நாளை (27.8.2025) கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் ஆந்திர மாநிலம் யாதமரி, பூமிரெட்டி பள்ளியிலிருந்து வேலூர் மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள விதிமுறைகளை மீறி 10 அடிக்கும் உயரமான பல்வேறு விநாயகர் சிலைகள் வாகனங்கள் மூலம் கொண்டு வரப்படுவதாக தகவல் கிடைத்தது.

இதையடுத்து வேலூர் மாவட்ட காவல் துறையினர் காவல்துறை கண்காணிப்பாளர் மயில்வாகனன் உத்தரவின்பேரில், காவல் துறையினர் குடியாத்தம் அடுத்த பரதராமி அருகே தமிழ்நாடு எல்லையில் உள்ள சோதனைச்சாவடி அருகே கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழ்நாடு பகுதிக்குள் விநாயகர் சிலைகளை ஏற்றி வந்த வாகனங்களை தீவிரமாக கண்காணித்து, அனுமதிக்கப் பட்ட உயரத்தைவிட தவிர 10 அடிக்கும் அதிகமான உயரமுள்ள விநாயகர் சிலைகளை தமிழ்நாடு எல்லைப் பகுதிக்குள் அனுமதிக்காமல் மீண்டும் ஆந்திர பகுதிக்கு திருப்பி அனுப்பினர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *