பகுத்தறிவாளர் கழகம், இளைஞரணி சார்பில் மாணவர்களுக்கு துண்டறிக்கை பிரச்சாரம்

1 Min Read

தருமபுரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம், இளைஞரணி சார்பில் அரசு கலைக்கல்லூரி முன்பு மாணவர்களுக்கு ஒன்றிய பிஜேபி அரசு சமஸ்கிருதத்திற்கு ரூ.2533 கோடியும், தமிழ் உள்ளிட்ட அய்ந்து தென்னாட்டு மொழிகளுக்கு வெறும் ரூ.147 கோடி மட்டுமே ஒதுக்கி சூட்சுமத்தை செய்யும் பாஜக வின் அநீதியை மாணவர்களுக்கு துண்டறிக்கை வழங்கியும்,பிரச்சாரமும் செய்யப்பட்டது

சமஸ்கிருதத்திற்கு மட்டும் ரூ.2,533 கோடி!

தமிழ் உள்ளிட்ட அய்ந்து தென்னாட்டு மொழிகளுக்கு ரூ.147 கோடி மட்டுமே!

யாருக்குப் போகும் நிதி?

ஆர்.எஸ்.எஸ்.,பா.ஜ.க சூட்சுமத்தைப் புரிந்து கொள்வீர்!

என்கிற துண்டறிக்கை தலைமையிலிருந்து பகுத்தறிவாளர் கழகம் சார்பாக வாங்கப்பட்டு இளைஞரணியினரிடம் கொடுக்கப்பட்டது.

22-07-2025 அன்று மாலை தருமபுரி மாவட்ட விளையாட்டு அரங்கத்திற்கு வெளியே பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் கதிர்.செந்தில்குமார்,மாவட்ட செயலாளர் இர.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட அமைப்பாளர் தீ.அன்பரசு தலைமையில் துண்டறிக்கை கொடுக்க தொடங்கி வைத்தனர், உடன் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் மா.செல்லதுரை, நகர இளைஞரணித் தலைவர் சண்.இராமச்சந்திரன் களத்தில் இருந்தனர்.

7.8.2025 அன்று அரசு கலைக்கல்லூரி முன்பு மதியம் 01:00 மணிக்கு மாணவர்களுக்கு துண்டறிக்கை வழங்கப்பட்டது, களத்தில் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் மா.செல்லதுரை, நகர இளைஞரணித் தலைவர் சண்.இராமச்சந்திரன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *