ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பசுமை விழா

1 Min Read

ஜெயங்கொண்டம், ஆக.24- பெரியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பசுமை விழா கோலா கலமாக கொண்டா டப்பட்டது.

பள்ளி வளாகமே பசுமையுடன் காட்சி யளிக்க மாணவர்கள், ஆசிரியர்கள், பெற் றோர்கள் உற்சாகமாகக் கலந்து கொண்டனர்.

விழாவிற்கு முதல்வர் தலைமை ஏற்று தொடங்கி வைத்து மரக்கன்றுகள் நடும்பணியை துவக்கி வைத்தார்.

மழலைச் செல்வங்கள் பச்சை நிற ஆடை உடுத்தி பள்ளி வளாகத்தைப் பசுமை ஆக்கினர்.

மாணவர்களுக்குச் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவம், மரங்களின் பயன், இயற்கையின் பாதுகாக்கும் கடமை ஆகியவை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

சுற்றுச்சூழல் முக்கியத்துவம் குறித்து மாணவர்களே புரிந்து கொண்டு, விதைகளை சேகரித்து மழலைச் செல்வங்கள் உற்சாகத்துடன் தங்கள் பள்ளி வளாகத்தில் விதைகளைத் தெளித்து தண்ணீர் ஊற்றினர்.

உரமில்லா காய் ,கனிகளை  மாணவர்களே உற்பத்தி செய்து பள்ளி மாணவர்கள் விடுதிக்கு வழங்குவது வழக்கம்.

இவ்விழாவின் மூலம் பசுமையான சூழலை பாதுகாக்கும் பொறுப்புணர்வு மாணவர்களிடையே வலுப்பெற்றது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *