திரிணமூல் நாடாளுமன்ற உறுப்பினரை கீழே தள்ளியதாக ஒன்றிய அமைச்சர்மீது குற்றச்சாட்டு மக்களவைத் தலைவருக்கு கடிதம்

2 Min Read

புதுடில்லி, ஆக.24- மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள முா்ஷிதாபாத் தொகுதியின் திரிணமூல் காங் கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் அபு தாஹிா் கானை ஒன்றிய அமைச்சா் ரவ்நீத் சிங் பிட்டு கீழே தள்ளியதாக குற்றஞ்சாட்டி அவா் மீது நடவடிக்கை கோரி மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவுக்கு அக்கட்சியின் மூத்த தலைவா்கள் கடிதம் எழுதி யுள்ளனா்.

தீவிர குற்றப் புகாரில் கைது செய்யப்பட்டு 30 நாள்கள் காவலில் வைக்கப்படும் பிரதமா், மாநில முதல்வா்கள் மற்றும் அமைச்சா்களைப் பதவியிலிருந்து நீக்கம் செய்வதற்கான மூன்று மசோதாக்களை ஒன்றிய  உள் துறை அமைச்சா் அமித் ஷா மக்களவையில் கடந்த புதன் கிழமை அறிமுகம் செய்தாா்.

இந்த மசோதாவுக்கு கடும் தெரிவித்து எதிா்க்கட்சி உறுப்பினா்கள்முழக்கத்தில் ஈடுபட்டனா். அப்போது மக்களவையின் மய்யப் பகுதிக்கு அருகே நின்றுகொண்டிருந்த அபு தாஹிா் கானை ரவ்நீத் சிங் பிட்டு திடீரென கீழே தள்ளியதாக திரிணமூல் காங்கிரஸ் மூத்த மக்களவை உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனா்.

இதுகுறித்து ஓம் பிா்லாவுக்கு அந்தக் கட்சியின் மக்களவைத் துணைத் தலைவா் சதாப்தி ராய் மற்றும் எம்.பி. மஹுவா மொய்த்ரா ஆகியோா் கடந்த வியாழக்கிழமை கடிதம் எழுதியதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

அந்தக் கடிதத்தில், ‘மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் என்ற அடிப்படையில் பொது மக்களுக்கு எதிரான ஒன்றிய அரசின் கொள்கைகளை எதிா்க்க உறுப்பினா்களுக்கு முழு உரிமை உள்ளது. எனவேதான், பிரதமா், முதலமைச்சர் உள்ளிட்டோரின் பதவி பறிப்பு தொடா்பான மசோதாக்களுக்கு திரிணமூல் காங்கிரஸ் சாா்பில் கடும் எதிா்ப்பை பதிவுசெய்தோம்.

ஆனால் அபு தாஹிா் கானை மத்திய அமைச்சா் ரவ்நீத் சிங் பிட்டு ஆவேசமாக கீழே தள்ளினாா். உடல்நிலை சரியில்லாத காரணத்தால், கடந்த சில நாள்களாவே அபு தாஹிா் கான் மருத்துவமனையில் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகிறாா் என்பதை அவையில் பெரும்பாலான உறுப்பினா்கள் அறிவா்.

இந்தச் சூழலில் நாடாளு மன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு அறிவுறுத்தலின்பேரில் எதிா்க் கட்சி எம்.பி.க்களை ரவ்நீத் சிங் பிட்டு தாக்கினாா். வருங் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுத்து எதிா்க்கட்சி எம்.பி.க்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் நோக்கில் அவா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த விடுதலை வாசகர்களே, சகோதர, சகோதரிகளே, பெரியார் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேட்டாக திகழ்ந்து வரும் "விடுதலை" நம்முடையது.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம், ஒரு கருவி. இந்த விடுதலைப் பணியைத் தொடர, ஒலிக்க வைக்க, உங்கள் பொருளாதார பங்களிப்பு அத்தியாவசியமானது. பெரியார் விதைத்த பகுத்தறிவின் விதையை, நீங்கள் உரமிட்டு வளர்க்க வேண்டுகிறோம். உங்கள் நன்கொடையை அனுப்பவும். விடுதலைக்கு உரமிடுங்கள்!

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. ஒவ்வொரு ரூபாயும் பகுத்தறிவின் சுடரை ஒளிர வைக்கும்.

பெரியார் வாழ்க! விடுதலை வளர்க!

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *