ஜப்பானில் அலைபேசியை பகலில் 2 மணி நேரம் மட்டுமே பயன்படுத்த வேண்டும்! புதிய சட்டத்தை அமல்படுத்த முடிவு

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

டோக்கியோ, ஆக. 23- மத்திய ஜப்பானின் தோயாகே நகரில், அலுவலகம் மற்றும் பள்ளி நேரங்களுக்குப் பிறகு, நாள் ஒன்றுக்கு இரண்டு மணிநேரம் மட்டுமே அலைபேசியைப் பயன்படுத்த வேண்டும் எனப் பரிந்துரைக்கப்பட்டு, அது தொடர்பான சட்ட வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால், வரும் அக்டோபர் மாதம் முதல் நடைமுறைக்கு வரும்.

வரம்பற்ற அலைபேசி பயன்பாட்டினால் ஏற்படும் உடல் மற்றும் மனநலச் சிக்கல்களைத் தடுப்பதே இந்த முயற்சிக்கு முக்கியக் காரணம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் பலரும் இந்த முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். “தற்போதைய சூழலில், நாள் ஒன்றுக்கு இரண்டு மணிநேரம் மட்டுமே அலைபேசி பயன்படுத்துவது சாத்தியமில்லை” என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்தச் சட்டம், தொழில்நுட்பத்தின் அதீத பயன்பாடு குறித்த விவாதத்தை ஜப்பானில் மீண்டும் தொடங்கி வைத்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *