தமிழ்நாட்டிற்கு வரும் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி

1 Min Read

புதுடில்லி, ஆக.22 இந்தியாவின் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் மேனாள் உச்சநீதிமன்ற நீதிபதி சுதர்சன் ரெட்டி சி.பி. ராதா கிருஷ்ணனுக்குப் போட்டி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இருவரும் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்பதால், இந்தத் தேர்தல் “தெற்குக்கும் தெற்குக்கும் இடையிலான மோதல்” என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.  ‘இந்தியா’ கூட்டணியின் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி ஆகஸ்ட் 23 அன்று தமிழ்நாட்டிற்கு வரவுள்ளார். அவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்து தனது வேட்பு மனுவுக்கு ஆதரவு கோர உள்ளார். மேலும், மாநிலத்தில் உள்ள ‘இந்தியா’ கூட்டணியின் மற்ற கட்சித் தலைவர்களை யும் அவர் சந்தித்து ஆதரவு திரட்ட இருக்கிறார்.

 

 

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *