இதுதான் பிஜேபி ஆட்சி : மாணவர்களுக்கு மதிய உணவாக நாய் அசுத்தம் செய்த உணவு அளிப்பு

1 Min Read

பிலாஸ்பூர், ஆக.22 நாய் அசுத்தம் செய்த மதிய உணவைச் சாப்பிட்ட 84 மாணவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும் என்று சத்தீஸ்கர் மாநில அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம் பலோ டாபஜார்-படாப்புரா மாவட்டத் தில் உள்ள அரசு நடுநிலைப் பள் ளியில் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. அப் போது, மதிய உணவுத் திட்ட ஊழியர்கள், நாய் அசுத்தம் செய்த உணவை 84 மாணவர்களுக்கு வழங்கி விட்டதாகத் தெரிய வந்துள்ளது. விவரம் அறிந்த பின்னர் அந்த மாணவர்களுக்கு 3 டோஸ் ரேபீஸ் தடுப்பூசியை செலுத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.

இதனிடையே இந்த விவகாரத்தை அரசின் கவனக் குறைவு என்று கூறி சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் தாமாகவே முன்வந்து வழக்கு பதிவு செய் தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி ரமேஷ் சின்ஹா, நீதிபதி பிபு தத்தா குரு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று (21.8.2025) விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதி கள் கூறியதாவது: நாய் அசுத்தம் செய்த உணவைச் சாப்பிட்ட மாணவர்கள் 84 பேருக்கும் அடுத்த ஒரு மாதத்துக்குள் தலா ரூ.25 ஆயிரத்தை சத்தீஸ்கர் மாநில அரசு வழங்கவேண்டும். மதிய உணவு சாப்பிடும் மாணவர்களுக்கு தரமான உணவை வழங்குவதில் இனி மாநிலஅரசு கண்காணிப்புடன் நடந்துகொள்ளவேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *