உதயகுமார்- தமிழ் ஈழம் இணையேற்பு விழா

Viduthalai
1 Min Read

அரசியல்

 உதயகுமார்- தமிழ் ஈழம் இணையேற்பு விழா

இது ஒரு ஜாதி மறுப்பு தாலி மறுப்பு மணவிழா

பொதுச் செயலாளர் துரை சந்திரசேகரன் நடத்தி வைத்தார்

குடந்தை கழக செயல்வீரர் செல்வரசன் -கனிமொழி ஆகியோர் மகள் தமிழ் ஈழம் – மதுரை உதயகுமார் வாழ்க்கை இணைநலஒப்பந்த விழாவை குடந்தை தனலட்சுமி திருமண மண்டபத்தில் 1.5.2023 அன்று காலை 10 மணி அளவில் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் தலைமை ஏற்று நடத்தி வைத்து வாழ்வியல் உரை ஆற்றினார் .நிகழ்வுக்கு மாவட்ட கழக தலைவர் வழக்குரைஞர் நிம்மதி முன்னிலை வகித்தார். சாக்கோட்டை இளங்கோவன் வரவேற்புரை ஆற்றினார். கழக அமைப்பாளர் குருசாமி, நகரத் தலைவர் கவுதமன், நகர செயலாளர் வழக்குரைஞர் ரமேஷ் ,தமிழ்மணி ,சோழபுரம் சித்தார்த்தன், மகளிர் அணி திரிபுரசுந்தரி ,பேராசிரியர் பிரபாகரன் ,மயிலாடுதுறை ரசீத் கான் ,சிற்பி பேகன் ஆகியோர் மணமக்களை பாராட்டி பேசினர். கொள்கை பரப்புரை விழாவாக மணவிழா அமைந்தது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *