குவைத்தில் கள்ளச்சாராயம் குடித்த இந்தியர்கள் உட்பட 23 பேர் பலி

1 Min Read

குவைத் சிட்டி, ஆக. 20- மேற்காசிய நாடான குவைத்தில் கள்ளச் சாராயம் குடித்ததில் 23 பேர் உயிரிழந்தனர். மேலும், 160 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில், கள்ளச்சாராய விற்பனைக் கும்பலைச் சேர்ந்த 67 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முஸ்லிம் நாடான குவைத்தில் மதுபானம் விற்பது, வாங்குவது, வைத்திருப்பது, குடிப்பது ஆகியவை சட்டப்படி குற்றமாகும். இதைப் பயன்படுத்தி, அங்கு கள்ளச்சாராய விற்பனை அதிகளவில் நடக்கிறது. சமீபத்தில் கள்ளச்சாராயம் குடித்தவர்களில் 40 இந்தியர்கள் உட்பட 160 பேர் உடல்நலம் பாதிக் கப்பட்டனர். இவர்களில் 23 பேர் உயிரிழந்தனர். பலர் உயிருக்கு ஆபத் தான நிலையில் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, குவைத் அரசு கள்ளச்சாராயக் கும்பலை ஒழிக்க தீவிர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. ரகசியச் சோதனைகள் நடத்தப்பட்டு, கள்ளச் சாராயம் தயாரித்து விற்ற 67 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் இந்தியர் மற்றும் பங்களாதேஷ் நாட்டவர்களும் அடங் குவர். எனினும், அவர் கள் குறித்த கூடுதல் விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *