நிதி கேட்டு முதலமைச்சர் எழுதிய கடிதம் ஒன்றிய நிதி அமைச்சரிடம் அமைச்சர் தங்கம் தென்னரசு, கனிமொழி எம்.பி. நேரில் கொடுத்தனர்

1 Min Read

புதுடில்லி, ஆக.20- டில்லியில் நேற்று ஒன்றிய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை, தமிழ்நாடு அரசு சார்பில் நாடாளுமன்ற தி.மு.க. குழுத் தலைவர் கனி மொழி மற்றும் தமிழ்நாடு நிதித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் சந்தித்து பேசினர்.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட பதிவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 2025-2026-ஆம் நிதியாண்டில், நபார்டு வங்கியின் ஊரக உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.4,500 கோடிக்கான நிதியையும், மீன்வள உள்கட்ட மைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ் குளச்சல் மீன்பிடித் துறைமுக விரிவாக்கத்திற்கு ரூ.350 கோடி நிதியையும் விரைந்து வழங்க ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று ஒன்றிய நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தமிழ்நாடு அரசு சார்பில் நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழியுடன் இணைந்து, டில்லியில் ஒன்றிய நிதி அமைச்சரை சந்தித்து, அக்கடி தத்தை வழங்கியதுடன் விரைவில் உரிய நிதியை வழங்க ஆவன செய்ய வேண்டுமென்று வேண்டு கோள் விடுத்தோம்.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *