“பாஜக செய்தித் தொடர்பாளராகவே மாறிய தலைமைத் தேர்தல் ஆணையர்” பத்திரிகையாளர் சந்திப்பில் தலைவர்கள் குற்றச்சாட்டு

1 Min Read

இந்தியா கூட்டணியின் தலை வர்கள் நேற்று (18.8.2025) அரசி யலமைப்பு கிளப்பில் நடத்திய பத்திரி கையாளர் சந்திப்பில், முதன்மை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின் கட்சி சார்பு நிலைப்பாட்டைக் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

கவுரவ் கோகோய் (காங்கிரஸ்): “தலைமைத் தேர்தல் ஆணையரால், எந்த கேள்விக்கும் பதிலளிக்க முடிய வில்லை, மாறாக தனது பொறுப்பி லிருந்து தப்பிக்க முயன்றார். அதற்கா கவே எதிர்க்கட்சிகள் மீது தாக்குதல் நடத்தினார்.”

மஹுவா மொய்த்ரா (திரிணா முல் காங்கிரஸ்): “இது தலைமைத் தேர்தல் ஆணையரின் அவமானகரமான கைப்பாவை நாடகம். எதிர்க்கட்சி களைத் தாக்கும் வேலையை, அவரது அரசியல் எஜமானர்களிடம் (பாஜகவிடம்) விட்டுவிட வேண்டும்.”

ராம் கோபால் யாதவ் (சமாஜ்வாதி கட்சி): “2022 இல் 18,000 பிரமாணப் பத்திரங்களுடன் சமாஜ்வாதி கட்சி யின் ஆதரவாளர்களின் வாக்குகள் நீக்கப்பட்டதாக புகார் அளித்தோம். ஆனால் இன்றுவரை எதுவும் நடக்க வில்லை.”

அரவிந்த் சாவந்த் (சிவசேனா-உபிடி): “தலைமைத் தேர்தல் ஆணை யர் பாஜகவின் செய்தித் தொடர்பாளராக நடந்து கொண்டார். மகாராட்டிராவில் 5 மாதங்களில் 70 லட்சம் வாக்குகள் எப்படி சேர்க்கப்பட்டன என்பதற்கு அவரிடம் பதிலில்லை.”

மனோஜ் ஜா (ராஷ்ட்ரிய ஜனதா தளம்): “தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பிக்கை முற்றிலும் சிதைந்துவிட்டது. பீகாரில் நேற்று தொடங்கிய வாக்காளர் உரிமைப் பயணத்திலிருந்து கவனத்தை திசை திருப்ப வேண்டுமென்றே தலைமைத் தேர்தல் ஆணையர் 17.8.2025 இல் செய்தியாளர் சந்திப்பு நடத்தினார்.”

ஜான் பிரிட்டாஸ் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி): “தலைமைத் தேர்தல் ஆணையர் அந்தப் பதவியில் இருக்கும் உரிமையை இழந்துவிட்டார். எதிர்க்கட்சிகளுக்கு எதிராக அவர் போரை அறிவித்துள்ளார்”.

இவ்வாறு தலைவர்கள் குறிப்பிட்ட னர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *