திருப்பூர், ஆக. 19- திருப்பூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் 17-08- 2025 மாலை 6.30 மணி அளவில் திருப்பூர் கொங்கு நகர் பெரியார் படிப்பகத்தில் நடைபெற்றது
திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார் இயக்க செயல் பாடுகள் குறித்தும் பெரியார் உலகம் நிதி திரட்டுதல் அவசி யம், தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவை எழுச்சியுடன் கொண்டாடுவது விடுதலை சந்தாக்களை புதுப்பித்து வழங்கிட வேண்டும் செங்கல் பட்டில் நடைபெறும் சுயமரி யாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் குடும்பத்துடன் பங்கேற்பதின் அவசியம் இளைஞரணி சார்பில் துண்டறிக்கை விநியோகம் பெரியார் சமூக காப்பு அணியில் இளைஞர்கள் மாணவர்களை அதிகம் பங்கேற்கச் செய்வது ஆசிரியர் அவர்களின் அளப் பரிய உழைப்பால் கிடைத்திட்ட பலன்கள் குறித்து கூட்டத்திற்கு தலைமை ஏற்று உரையாற்றினார்
திருப்பூர் மாவட்ட தலைவர் யாழ். ஆறுச்சாமி திருப்பூர் மாவட்ட ப.க பல்லடம் வேலு.இளங்கோவன் ஆகியோர் முன்னிலை ஏற்று உரையாற்றினர் பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளர் மு.நாச்சிமுத்து, திருப்பூர் மாநகரத் தலைவர் கருணாகரன், திருப்பூர் மாநகர செயலாளர் செல்வராசு, முத்தையா, பகுத்தறிவாளர் கழக நகர தலைவர் சதாசிவம், பகுத்தறிவு கலை இலக்கிய அணி பொறுப்பாளர் நளி னம் நாகராஜன், மகளிர் பாசறை மாவட்ட தலைவர் கிருஷ்ண வேணி, மாவட்ட இளைஞரணி தலைவர் துரைமுருகன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் வெற்றிவேல் உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்று உரையாற்றினர்
பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் பல்லடம் வேலு, இளங்கோவன், பகுத் தறிவாளர் கழக மாவட்ட செய லாளர் மு.நாச்சிமுத்து ஆகியோர் தலா ஒரு விடுதலை ஆண்டு சந்தா தொகை ரூ 4000 மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் அவர்களிடம் வழங்கினர்
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
மாவட்டத்தில் முடிவுற்ற விடுதலை சந்தாக்களை புதுப்பித் தும், புதிய சந்தாக்களை சேர்க் கும் பணியில் கழக தோழர்கள் அனைவரும் இணைந்து பணியாற்றுவது என முடிவு செய்யப்படுகிறது.
“உலகம் பெரியார் மயம் – பெரியார் உலகமயம் என்ற உயர்ந்த நோக்கத்தோடு திருச்சி சிறுகனூரில் 100 கோடியில் அமைய உள்ள பெரியார் உலகத் திற்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வேண்டுகோளை ஏற்று மாவட்ட கழகத்தின் சார்பில் நிதி திரட்டி வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.
2025 அக்டோபர் 4 அன்று செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் தமிழ்நாடு முதலமைச்சர் சமூக நீதி காத்த சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கும் சுயமரியாதை இயக்கம் நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் தனிப் பேருந்தில் அதிகமான கழகத் தோழர்கள் அனைவரும் குடும்பத்துடன் பங்கேற்று சிறப்பிப்பது என முடிவு செய்யப்படுகிறது.
செப்டம்பர் 6, 7 கோபிசெட்டி பாளையத்தில் நடைபெறும் பெரியார் சமூக காப்பு அணி பயிற்சியில் மாவட்டத்திலிருந்து இளைஞர்கள் மாணவர்களை பங்கேற்கச் செய்வது என முடிவு செய்யப்படுகிறது.