ஆவடி, ஆக. 18- சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு விளக்க பொதுக்கூட்டம் ஆவடி மாவட்ட கழக சார்பில் ஆவடி நகர திராவிடர் கழகம் ஏற்பாட்டில் 16-08-2025 சனிக்கிழமை மாலை 05-30 மணிக்கு எச்.வி.எப். சாலை , ஆவடி பேருந்து நிலையம் அருகில் ஆவடி மாவட்ட கழக காப்பாளர் பா, தென்னரசு, செயலாளர் க.இளவரசன், துணைத்தலைவர்கள் மு.ரகுபதி, வை, கலையரசன், துணைச்செயலாளர் பூவை தமிழ்ச்செல்வன், இளைஞர் அணி செயலாளர் சு.வெங்கடேசன், மகளிர் அணி தலைவர் சி.ஜெயந்தி, மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் க.கார்த்திக்கேயன், பொதுக்குழு உறுப்பினர் பூவை செல்வி, பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் ஆகியோர் முன்னிலையில் ஆவடி நகர கழக செயலாளர் இ.தமிழ்மணி ஒருங்கிணைப்பில் நகர கழக தலைவர் கோ.முருகன் தலைமையில் நடைபெற்றது.
தொடக்கத்தில் புரட்சிப்பாடகர் கோவன் குழுவினரின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.அடுத்து திராவிட மாணவர் கழக மாநில துணைச்செயலாளர் செ.பெ.தொண்டறம் தொடக்கவுரையாற்ற ஆவடி மாவட்ட திராவிடர் கழக தலைவர் வெ.கார்வேந்தன், வழக்குரைஞர் துரை அருண், தி.மு.கழக தலைமை நிலைய பேச்சாளர் கா.மு.ஜான், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட பொறுப்பாளர் முல்லைதமிழன், தமிழர் விடுதலை கழக ஒருங்கிணைப்பாளர் சவு.சுந்தரமூர்த்தி, புரட்சிகர இளைஞர் முன்னணி வள்ளுவன் ஆகியோர் மாநாடு குறித்து விளக்கவுரையாற்றிய பின் திராவிடர் கழக பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் தனது சிறப்புரையில் மாநாடு வெற்றிகரமாக நடைபெற அனைவரும் கலந்து கொள்ள வேண்டுமென அன்போடும் உரிமையோடும் கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டார்.
மாவட்ட கழக தோழர்கள் அனைவரையும் அழைத்துச் சென்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து பெரியார் உலகத்திற்கு நிதி அளித்ததற்காக ஆவடி மாவட்ட கழகத்திற்கு பாராட்டையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார்.ஆவடி மாவட்ட திராவிடர் கழக அனைத்து பகுதி பொறுப்பாளர்கள், கழக தோழர்கள் மற்றும் அனைத்தியக்க தோழர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். இறுதியாக ஆவடி மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைத்தலைவர் எஸ்.ஜெயராமன் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவடைந்தது.