செங்கல்பட்டு சுயமரியாதை இயக்க நிறைவு விழா மாநாட்டில் குடும்பத்துடன் பங்கேற்பது
தந்தை பெரியார் 147ஆவது பிறந்தநாள் விழாவை எழுச்சியுடன் கொண்டாடுவது
திருச்சி, ஆக. 17- திருச்சி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் 13-08- 2025 மாலை 6 மணி அளவில் திருச்சி பெரியார் மாளிகையில் நடைபெற்றது
கழக மாநில ஒருங்கிணைப் பாளர் இரா. ஜெயக்குமார் இயக்க செயல்பாடுகள் குறித்தும் பெரியார் உலகம் நிதி திரட்டுதல் அவசியம், தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவை எழுச்சியுடன் கொண்டாடுவது விடுதலை சந்தாக்களை புதுப் பித்து வழங்கிட வேண்டும் செங்கல்பட்டில் நடை பெறும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் குடும் பத்துடன் பங்கேற்பதின் அவசியம் இளைஞரணி சார்பில் துண்டறிக்கை விநியோகம் பெரியார் சமூக காப்பு அணியில் இளைஞர்கள் மாணவர்களை அதிகம் பங்கேற்கச் செய்வது ஆசிரியர் அவர்களின் அளப்பரிய உழைப்பால் கிடைத் திட்ட பலன்கள் குறித்து கூட் டத்திற்கு தலைமையேற்று உரை யாற்றினார்.
மாவட்ட கழக தலைவர் ஆரோக் கியராஜ், மாவட்ட செயலாளர் மகாமணி, பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ் ஆகியோர் முன்னிலை ஏற்று உரையாற்றினர். காட்டூர் விஜய்யோகாஆனந்த், மாநகரத் தலைவர் ராமதாஸ், மாவட்ட மகளிர் அணி தலைவர் ரெஜினா பால்ராஜ், மாவட்ட மகளிர் அணி துணைத் தலைவர் வசந்தி, ஜெயில் பேட்டை குணசேகரன், திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர் தமிழ்ச்சுடர், திருவரங்கம் நகரத் தலைவர் முருகன், பெல் தொழிலாளர் சங்கத் தலைவர் அசோக், துவாக்குடி கிளை தலைவர் கிருஷ்ணன், அரவானூர்பகுதி தலை வர் பிரவீன், வேலாயுதம் ஆகியோர் கருத்துரை ஆற்றினர் நகர மாநகர ப.க தலைவர் குப்துதீன், பெல் ஆறு முகம், கல்பாக்கம் ராமச்சந்திரன் ,பொன்னுச்சாமி, அந்தோணிராஜ் உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர். ஜெயராஜ் நன்றி கூறினார்.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
மாவட்டத்தில் முடிவுற்ற விடுதலை சந்தாக்களை புதுப்பித்தும், புதிய சந்தாக்களை சேர்க்கும் பணியில் கழக தோழர்கள் அனை வரும் இணைந்து பணியாற்றுவது என முடிவு செய்யப்படுகிறது.
“உலகம் பெரியார் மயம் – பெரியார் உலகமயம் என்ற உயர்ந்த நோக்கத்தோடு திருச்சி சிறுகனூரில் 100 கோடியில் அமைய உள்ள பெரியார் உலகத்திற்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வேண்டுகோளை ஏற்று மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் நிதித் திரட்டி வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.
அறிவுலக ஆசான் தந்தை பெரியார் 147 ஆவது பிறந்த நாள் விழாவினை (செப் – 17 சமூக நீதி நாள்) மிக எழுச்சியோடு கொண்டாடும் வகையில், கழகத் தோழர்களின் இல்லங்களில் கழகக் கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடுவது, நகராட்சி, பேரூராட்சி, கிராம பகுதிகளில் பல்வேறு இடங்களில் தந்தை பெரியார் படங்களை அலங்கரித்து வைத்தும், தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து திராவிடர்களின் திருநாளாக கொண்டாடி மகிழ்வது என முடிவு செய்யப்படுகிறது.
2025 அக்டோபர் 4 அன்று செங்கல்பட்டு மாவட்டம் மறை மலைநகரில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் தமிழ்நாடு முதல மைச்சர் சமூக நீதி காத்த சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கும் சுயமரியாதை இயக்கம் நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் தனிப் பேருந்தில் அதிகமான கழகத் தோழர்கள் அனைவரும் குடும்பத்துடன் பங்கேற்று சிறப்பிப்பது என முடிவு செய்யப்படுகிறது.
சுவரெழுத்து மற்றும் சுவரொட்டி பிரச்சாரம்
தந்தை பெரியார் 147 ஆவது பிறந்த நாள் மற்றும் செங்கல்பட்டு சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டை விளக்கி நகரமெங்கும் மற்றும் புறவழிச்சாலை நெடுகிலும் சுவரெழுத்து மற்றும் சுவரொட்டி பிரச்சாரம் செய்வது என முடிவு செய்யப்படுகிறது.
அக்டோபர் 16,17 தஞ்சை வல்லத்தில் நடைபெறும் பெரியார் சமூக காப்பு அணி பயிற்சியில் மாவட்டத்திலிருந்து இளைஞர்கள் மாணவர்களை பங்கேற்கச் செய்வது என முடிவு செய்யப்படுகிறது
மாநாட்டு விளக்க பரப்புரை
தலைமை கழகத்தால் அறிவிக்கப் பட்டுள்ள செங்கல்பட்டு மறை மலைநகரில் நடைபெறும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மாநாட்டு விளக்க பரப் புரை கூட்டத்தை ஆகஸ்ட் 16 திரு வரங்கத்திலும் ஆகஸ்ட் 18 அண்ணா நகர் காவலர் குடியிருப்பு பகுதியிலும் மிக சிறப்பாக நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
புதிய பொறுப்பாளர்கள்
திருவெறும்பூர் ஒன்றிய கழக தலைவராக இரா.தமிழ்ச்சுடர், ஒன்றிய கழக செயலாளராக ம.சங்கிலி முத்து ஆகியோர் நியமிக் கப்படுகிறார்கள்.
திருவெறும்பூர் ஒன்றிய தலைவர் இரா.தமிழ்ச்சுடர் 5 அரையாண்டு சந்தாவும் மாவட்டம் மகளிர் தலைவர் ரெஜினா பால்ராஜ் ஒரு ஆண்டு சந்தாவும் வழங்கினார்கள்.