கடந்த 4.5.2023 சனியன்று சென்னைக்கு வருகை தந்த பொதுத் துறை நிறுவனங்களுக்கான பார்லிமெண்டரி கமிட்டி முன் திருவெறும்பூர் பெல் வளாக ஒப்பந்த தொழிலாளர் நலச் சங்கத்தின் சார்பில், செயலாளர் எம்.சேகர், பொருளாளர் அர.காமராஜ், திராவிடர் தொழிலாளர் கழகப் பேரவைச் செயலாளர் சிவ.குருநாதன் ஆகியோர் பார்லி மெண்டரி கமிட்டியைச் சந்தித்து கோரிக்கை மனுவினை அளித்தனர்.
அதன் விவரம் வருமாறு:
1. கடந்த 40 ஆண்டுகளாக பெல் நிறுவனத்தின் கீழ் நேரடி கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் சொசைட்டி பெல் வட்டக்கூடுறவு ஒப்பந்த தொழிலாளர் நல சங்கம் YT 11 சங்கத்தில் பெல் நிறுவனத்தில் நிரந்தர தொழிலாளர்களுக்கு இணையாக பணி புரிந்து வரும் LCS தொழிலாளர் குறைந்தபட்ச ஊதியத்தில் சொல்லொண்ணா துயரத்தோடு குடும்பத்துடன் மிகவும் வறுமையில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு 13 ஆண்டுகளாக ஊதிய உயர்வு உயர்த்தி கொடுக்காமல் குறைந்தபட்ச சம்பளத்தி லேயே வாழ்க்கை நடத்த முடியாமல் தவித்து வருகிறார்கள் அவரிகளின் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு குறைந்தபட்ச ஊதியத்தில் பெல் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு வரும் LCS தொழிலாளர்களுக்கு பெல் தொழிலா ளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் இணையான அடிப்படை சம்பளம் வழங்கி அவர்களின் வாழ்வாதரத்திற்கு பார்லி மெண்டரி கமிட்டி தலையிட்டு சம்பளம் வழங்க ஆவன செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
2. LCS தொழிலாளர்கள் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேல் ESI மருத்துவ வசதி கிடைக்க பெறவில்லை இதனால் LCS தொழிலாளர்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாக்கப் பட்டு மிகவும் அவதிபட்டு பல தொழிலாளர்கள் இறந்து உள்ளனர், உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலையில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே சர்வீஸில் உள்ள லிசிஷி தொழிலாளர்களுக்கு பெல் மருத்துவமனையில் மருத்தும் பார்ப்பதற்கு உரிய நடவடிக்கை எடுத்து லிசிஷி தொழிலாளர்களின் உயிரை பாதுகாக்க ஆவன செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
3.BHEL, NLC, OFT, BEL, HAPP போன்ற பொதுத் துறை நிறுவனங்களில் பணி புரியும் ஒப்பந்த தொழிலாளர் களுக்கு வழங்கபட்டு வரும் ஊதியம் அந்தந்த மாநில அரசு வெளியிட்டு உள்ள குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது அந்த வருமானத்தில் குடும்பம் நடத்த மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். அதை மாற்றி மத்திய தொழிலாளர் நல அதிகாரிகள் ஆய்வு செய்து அவர்களுக்கு பொதுதுறை நிறுவனத்தில் வேலை செய்யும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு என்று தனியாக ஊதியம் நிர்ணயித்து வழங்க கமிட்டி ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
4. BHEL ஒப்பந்ததாரரிடம் முதன்மை வேலை அளிப்பவர் ஒப்பந்த தொழிலாளர் பணி வழங்குகிறார்கள். ஒப்பந்ததாரர் ஆண்டுதோறும் உரிமத்தை புதுப்பித்து வேலை செய்கிறார்கள். ஆனால் அரசு ஒப்பந்த தொழிலாளர் முறைப்படுத்துதல் மற்றும் நீக்குதல் சட்டம் 1970(CLR & A act 1970) – அய் முறைப்படத்துவதில்லை; ஒப்ந்தம் அளிக்கும் முதன்மை வேலை அளிப்பவர் தொடர்ச்சியாக வேலைகளையும் ஒப்பந்த அடிப்படையில் வாங்குகிறார்கள்.
5. இம்முறையை மாற்றியமைத்திட வேண்டுமெனவும் ஒப்பந்ததாரருக்கு வழங்கும் தொடர்ச்சி இல்லாத வேலை களை மட்டும் வழங்கி, அரசு இயற்றியுள்ள சட்டம் தொழிலா ளர்களுக்கு பயனளிக்கும் வகையில் ஒன்றிய மாநில அரசுகள் மாற்றியமைக்க ஆவன செய்திட வேண்டுமென வும், முதன்மை வேலையளிப்பவர் ஒப்பந்தம் வழங்கும் போது ஏற்கனவே அந்தப் பணிகளை செய்து வந்த தொழிலாளர்களுக்குத் தொடர் பணிகள் மறுக்கப்படுவதை கண்டிப்பதோடு ஏற்கனவே பணிபுரிந்து வரும் தொழி லாளர்கள் பாதிக்காதவாறு ஒப்பந்தங்கள் மாற்றியமைக்க கமிட்டி நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
6. தமிழ்நாட்டில் இரண்டு இடங்களில் BHEL நிறுவனம் நடத்தி வருகிறது. திருச்சி, ராணிப்பேட்டை இந்த யூனிட்டுக் கும் நிர்வாகம் ஒன்று தான் ஆனால் ராணிபேட்டையில் உள்ள சொசைட்டி தொழிலாளர்கள் நிரந்தரம் செய்ய பட்டுள்ளார்கள் என்பதை கமிட்டியின் கவனத்திற்கு கொண்டு வந்தோடு அங்கு உள்ள ஒப்பந்த தொழிலாளர் களுக்கு அங்குமட்டும் நடைமுறையில் உள்ளது. இது வரையில் குறைந்தபட்ச சம்பளம் ஞிகி, மற்றும் அதிகபடியாக ரூ.15000 அங்குள்ள தொழிலாளர்களுக்கு மட்டும் வழங்கப் பட்டு வருகிறது. இதை கமிட்டி ஆய்வு செய்து ராணிப் பேட்டை யூனிட்டில் வழங்குவது போல் திருச்சி யூனிட்டுக் கும் வழங்க ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
7. போனஸ் (Bonus) உச்ச வரம்பை மாற்றி அமைத்து தொழிலாளர்களுக்கும் போனஸ் வழங்க கமிட்டி ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
8. BHEL Medical Dept Circerlur 02.02.2007 02.02.2007 படி LCS தொழிலாளர்கள் பணிபுரியும் இடத்தில் ஏற்படும் விபத்து மற்றும் உடல்நிலை கோளாறு சம்மந்தமாக BHEL மருத்துவ மனையில் வைத்தியம் செய்து கொள்ள அனுமதி அளித்துள்ளது. ஆனால் இப்பொழுது BHEL நிர்வாகம் அனுமதிப்பது இல்லை என்பதையும் கமிட்டி ஆய்வு செய்து தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். அதன் நகல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்து கொள்கிறோம்.
பார்லிமெண்ட்ரி கமிட்டி உறுப்பினர்கள் அனைவரும் இந்த கோரிக்கைகளை கனிவுடன் கவனித்து ஆக்க பூர்வ மாக ஒப்பந்த தொழிலாளர்களின் அத்தியாவசியம் பயன் களை பெற்று தருமாறு மிக பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
ஒப்பந்த தொழிலாளர் முறைப்படுத்துதல் மற்றும் நீக்குதல் சட்டம் 1970 பிரிவு 10இன்படி சுரங்கத் தொழில் தன்மையுள்ள தொழில்களிலும் அது சார்ந்த தொழில்களிலும் மற்றும் ஆண்டு முழுவதும் நடைபெறும் தொழில்களிலும் ஒப்பந்தத் தொழிலாளர்களை தடை செய்ய வேண்டுமெனத் தெரிவிக்கிறது. பிரிவு 10(1) குறிப்பாக ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் மேற்படி செயல்பாட்டை தடை செய்ய வேண்டு மெனத் தெரிவிக்கிறது. எங்களுடைய சங்கத் தொழிலாளர்கள் 20 ஆண்டுகளுக்கு மேலாக நிரந்தரத் தொழில் தன்மையுள்ள தொழிலிலேயே பணிபுரிந்து வருகின்றனர். அவர்களை ஒரு குறிப்பிட்ட கால அளவு நிர்ணயித்து நிரந்தரப்படுத்த வேண் டும். மற்றும் கால முறை ஊதிய நிர்ணயம் செய்திட வேண் டும் என்றும் வலியுறுத்துகிறோம்.
– மு.சேகர், செயலாளர்
‘பெல்’ ஒப்பந்த தொழிலாளர் நலச் சங்கம்
திருவெறும்பூர், திருச்சி – 13