ரயில் விபத்து: ரயில்வே அமைச்சர் பதவி விலகாவிட்டால் தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் கண்டன ஆர்ப்பாட்டம்

2 Min Read

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவிப்பு

சென்னை, ஜூன் 7– ஒடிசா ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஒரு வாரத்துக்குள் பதவி விலக வேண்டும். இல்லாவிட்டால் தமிழ்நாட்டில் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளி லும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று கே.எஸ்.அழ கிரி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சென்னை சத்திய மூர்த்தி பவனில் நேற்று  (6.6.2023)செய்தியாளர்களிடம் கூறிய தாவது:

நாடாளுமன்ற புதிய கட்டடம் திறப்பின்போது வைணவ ஆதீனங் கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர் கள், பவுத்தர்கள் ஆகியோரின் பிரதிநிதிகள் ஏன் அழைக்கப்பட வில்லை. ஒடிசா ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று ரயில்வே அமைச் சர் ஒரு வாரத்துக்குள் பதவி விலக வேண்டும். இல்லாவிட்டால் தமிழ் நாட்டில் உள்ள 234 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் தமிழ் நாடு காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

மன்னர் ஆட்சி முடிந்துவிட்ட நிலையில், நாடாளுமன்றத்தில் செங்கோலை வைத்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அது ஏற்புடையதல்ல. செங்கோல் அரசியல், கருநாடக மாநில தேர் தல்போல பாஜகவுக்கு தோல்வி யைத் தான் தரும். இவ்வாறு அழகிரி தெரிவித்தார்.

முன்னதாக மேனாள் அய்ஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில், செய்தியா ளர்களிடம் கூறியதாவது:

மணிப்பூர் மாநிலத்தில் நடை பெறும் கலவரத்துக்கு பா.ஜ.க.வின் மதவாத அரசியலே காரணம். அங்கு இன அழிப்பு நடைபெறு கிறது.

இணையதளம், தொலை பேசி வசதிஇல்லை. 40 ஆயிரம் பேர் காட்டுக்குள் சென்று விட்ட னர். மணிப்பூர் மக்களுக்கு காவல் துறையினர், ராணுவம் என யார் மீதும் நம்பிக்கை இல்லை. நவீன உலகில் எங்கும் நடக்காத கொடுமை அங்கு நடக்கிறது.

ஒன்றிய அரசுக்கு 3 கேள்விகள்:

மணிப்பூரில் 292 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் எத்தனை முகாம்களை அரசு நடத்துகிறது? கிராமங்களில் வீடுகள் கொளுத்தப்பட்டுள்ளன. அங்கு வசித்தவர்கள் தொடர் பானஆவணங்கள் உள்ளனவா? மணிப்பூரில் சட்டம் – ஒழுங்கை காவல் துறையினர் கவனிக்கிறார் களா அல்லது ராணுவம் கவனிக் கிறதா?

இந்த 3 கேள்விகளுக்கு ஒன் றியஅரசு பதில் அளிக்க வேண்டும். மணிப்பூரில் நடைபெறும் கலவரத் தில் இறந்தவர்கள் எண்ணிக்கை குறைத்து காட்டப்படுகிறது. 

அங்கு நடைபெறும் கலவ ரத்தை அரசு கண்டு கொள்ள வில்லை. இது மக்களுக்கான அரசி யல் அல்ல. மக்களிடம் விரோ தத்தை வளர்க்கும் அரசியல். இவ் வாறு அவர் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *