சென்னை, ஆக. 16 சுதந்திர நாள் விழாவை யொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு:–
சக குடிமக்கள் அனைவருக்கும் எனது இனிய விடுதலைநாள் வாழ்த்துகள்.
மக்களாட்சி திருடப்பட முடியாத, ஒவ்வொரு குடிமகனின் வாக்குக்கும் மதிப்பு இருக்கிற, வேற்றுமையே நமது பெரும் வலிமையெனக் கொண்டாடப்படுகிற நாட்டினைக் கட்டமைப்பதற்கான மனவுறுதியை இந்நாளில் நாம் மேலும் வலுப்படுத்திக் கொள்வோம்!
விளிம்பு நிலையில் உள்ளோரைப் பாதுகாப்பது!
உண்மையான விடுதலை என்பது மதவெறியை நிராகரிப்பது, பாகுபாடு களுக்கு முடிவு காண்பது, விளிம்பு நிலையில் உள்ளோரைப் பாதுகாப்பது! ஒவ்வொரு மனிதரும் சமத்துவத்தோடும், மாண்போடும், மரியாதையோடும் வாழ முடிகிற வகையில் நமது விடுதலைப் போராட்ட வீரர்கள் காண விரும்பிய கொள்கைகளை உயர்த்திப் பிடிப்பது தான் உண்மையான விடுதலையாக இருக்கும்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.