EPS-க்கு மீண்டும் நெருக்கடி கொடுக்கும் OPS, சசிகலா!

1 Min Read

அதிமுக பல அணிகளாக பிரிந்து கிடந்தாலும் பொதுவெளியில் சில மாதங்களாக மோதல்கள் இல்லாமல் இருந்தது. இது, ஒன்றிணைப்புக்கான சமிஞ்ஞை என கூறப்பட்டது. ஆனால், அதற்கான காலம் கடந்துவிட்டது என இபிஎஸ் அண்மையில் கூறியிருந்தார். இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எனக் கூறி சசிகலா வெளியிட்ட சுதந்திர நாள் வாழ்த்து, தலைமை பண்பு இல்லாத இபிஎஸ் என ஒபிஎஸ் விமர்சனம் என்று மீண்டும் அதிமுகவின் தலைமை பதவிக்கு நெருக்கடியை கொடுக்கின்றனர்.

கோயிலா கொலைப் பீடமா? 

கருநாடகா தர்மஸ்தலா கோயில் காரணமறியாத மரணங்கள் விவகாரத்தில், தான் மட்டுமே 80 பேரின் உடல்களை புதைத்ததாக கோயில் மேனாள் ஊழியர் பகீர் கிளப்பியுள்ளார். காடு, நதிப்படுகைகளில் உடல்களை புதைத்ததாகவும், அவற்றில் பெரும்பாலானவை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பட்டப்பகலில் உடல்களை புதைத்த போதும், அதை பார்த்த ஒருவர் கூட எந்த கேள்வியும் எழுப்பவில்லை என்றும் கூறியுள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *