மக்களவைத் தேர்தலில் பிஜேபியுடன் கூட்டணியா? மேனாள் பிரதமர் தேவகவுடா திட்டவட்டமாக மறுப்பு

1 Min Read

அரசியல்

பெங்களூரு, ஜூன் 8  ஜம்மு காஷ்மீர் மேனாள் முதலமைச்சரும் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவருமான ஃபரூக் அப்துல்லா பெங்களூருவில் மேனாள் பிரதமரும் ம.ஜ.த. தேசியத் தலைவருமான தேவ கவுடாவைச் சந்தித்துப் பேசினார். அப்போது மேனாள் முதலமைச்சர் குமாரசாமி, காங் கிரஸ் மேனாள் அமைச்சர் ரோஷன் பெய்க் உள்ளிட்டோரும் உடன் இருந்தனர். இந்த சந்திப்பின்போது மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்து பேசியதாக தெரிகிறது.

இதுகுறித்து செய்தியாளர்களி டம் தேவ கவுடா கூறியதாவது: கருநாடகாவில் காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய இரு தேசிய கட்சிகளுக்கு எதிராக ம.ஜ.த. போராடி வருகிறது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது கூட இரு கட்சிகளையும் கடுமையாக விமர்சித்தோம். ஆனால் மக்களவைத் தேர்தலில் நாங்கள் பாஜகவுடன் கூட்டணி அமைக்கப் போவதாக செய்திகள் வெளியாகின்றன. அது முற்றிலும் தவறான செய்தி. வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை. இந்தியாவில் உள்ள பெரும் பாலான கட்சிகள் பாஜகவுடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் கூட்டணி வைத்துள்ளன. மக்களவைத் தேர்தலின்போது யாருடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து முடிவெடுப்போம். எங்க ளுக்கு வரும் கூட்டணி அழைப் புகளை புறந்தள்ள மாட்டோம். ஃபரூக் அப்துல்லா உடன் காஷ்மீர் அரசியல் குறித்தே பேசினேன். 

இவ்வாறு தேவகவுடா தெரிவித்தார்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *