தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய செமிகண்டக்டர் ஆலை குஜராத்திற்கு மாற்றம் ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டு

புதுடில்லி, ஆக. 14 காங்கிரஸ் பொதுச் செயலாளர்  ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

மோடி அரசு நாட்டில் 4 செமி கண்டக்டர் உற்பத்தித் திட்டங்களுக்கு பச்சைக்கொடி காட்டி உள்ளது.

விரிவான செயல் திட்டத்திற்குப் பிறகு ஒரு முன்னணி தனி யார் நிறுவனம் தெலங் கானாவில் ஒரு திட் டத்திற்கான விண்ணப் பத்தைச் சமர்ப்பித் திருந்தது. இது ஆந்திராவிற்கு இடம்பெயர வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் அங்கீகரிக்கப்பட்டது.

வெகு காலத்திற்கு முன்பே இதேபோன்ற இடமாற்றம் கட்டாயப் படுத்தப்பட்டது. 2 செமி கண்டக்டர் உற்பத்தித் திட்டங்கள் அவற்றின் முன்மொழியப்பட்ட இடத்தை தெலங்கானாவி லிருந்து குஜராத்திற்கு மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதேபோல், தமிழ்நாட்டிற்காக திட்ட மிடப்பட்ட மற்றொரு தொழிற்சாலை குஜராத்திற்கு மாற வேண் டும் என்ற நிபந்தனையின் பேரில் ஒப்புதல் பெற்றது.

இன்னும் ஏதாவது சொல்ல வேண்டுமா? மாநிலங்களுக்கு இடை யிலான போட்டி இந்தியாவை வலிமை யாக்கும் என பிரதமர் பேசுகிறார். ஆனால் நடுவர் மிகவும் வெளிப்படையாக ஒருதலைப்பட்சமாக இருந்தால், போட்டி ஒரு கேலிக்கூத்தாக மாறும்.’’

இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *