ஆளுநர் மீது நடவடிக்கை எடுக்காத ஒன்றிய அரசின் நடவடிக்கை வருத்தமளிக்கிறது கனிமொழி

Viduthalai
1 Min Read

அரசியல்

நாகர்கோவில், ஜூன் 9 புகார் தெரிவித்தும் ஆளு நர் மீது ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்காதது வருத்தம் அளிக்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி  தெரிவித்துள் ளார். தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் கனி மொழி நாகர்கோவிலில் ஊடகங்க ளுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் தி.மு.க. பொறுப்பேற்ற பிறகு மக்களுக்கு பல்வேறு வளர்ச்சி திட்டங்களைக் கொண்டு வந்துள்ளது. பெண்கள் மற்றும் ஏழைகளுக்கு தி.மு.க. பாதுகாப்பு அரணாக விளங்கி வருகிறது. இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடு வளர்ச்சிப் பணியில் ஒரு முன்னுதாரணமாக விளங்கி வருகிறது. தமிழ்நாடு ஆளுநர் தொடர்ந்து அரசியல்வாதி போல் செயல்பட்டு வருகிறார். தமிழ்நாடு மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக அவர் கருத்துகளையும் தெரிவித்து வருகிறார். இதனை தமிழ்நாடு மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. இதுகுறித்து ஒன்றிய அரசிடம் தெரிவித்தும், ஆளுநர் மீது எந்தவித நடவடிக்கை எடுக்கவோ, கண்டிக்கவோ இல்லை என்பது தான் வருத்தம் அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *