‘இந்தியா போலவே சீனாவுக்கும் வரி விதிக்கப்படும்’ அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு

1 Min Read

வாசிங்டன், ஆக.13- ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தாத காரணத்தால், இந்தியாவுக்கு விதிக்கப்பட்ட வரியைப் போல சீனாவுக்கும் இரண்டு மடங்கு வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

கூடுதல் வரி

கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் இந்தியாவிடம் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என அமெரிக்கா அறிவித் திருந்தது.

இந்நிலையில், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தவில்லை எனக் கூறி, கூடுதலாக 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என அறிவித்தார். இதன் மூலம், இந்தியாவுக்கு விதிக்கப்படும் மொத்த வரி 50 சதவீதம் ஆக உயர்ந்துள்ளது.

செய்தியாளர் சந்திப்பின்போது, செய்தியாளர் ஒருவர், “இந்தியாவுக்கு கூடுதல் வரி விதித்தீர்கள். ஆனால், இந்தியாவை விட ரஷ்ய கச்சா எண்ணெயை அதிகம் வாங்கும் சீனா மீது ஏன் வரி விதிக்கவில்லை?” என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு ட்ரம்ப் பதிலளிக்கையில், “இந்தியாவுக்கு கூடுதல் வரி விதிக்கப்பட்டு உள்ளது. அடுத்து என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பாருங்கள். ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் மேலும் பல நாடுகளுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும்” என்றார்.

சீனாவுக்கும் வரி

மேலும், “ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதில் சீனா முதலிடத்திலும், இந்தியா இரண்டாம் இடத்திலும் இருப்பது உண்மைதான். இந்தியாவுக்கு கூடுதல் வரி விதித்திருப்பது சீனாவுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை ஆகும். இந்தியாவுக்கு விதிக்கப்பட்டதைப் போலவே சீனாவுக்கும் கூடுதல் வரி விதிக்கப்படும்” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *