சுயமரியாதைச்சுடரொளி கீழப்பாவூர் பி.பொன்ராஜ் படத்திறப்பு

1 Min Read

கீழப்பாவூர், ஆக. 11- பொதுக்குழு உறுப்பினர்அய்.இராமச்சந்திரன் தலைமையில் சுயமரியாதைச் சுடரொளி கீழப்பாவூர் பி.பொன்ராஜ் படத்திறப்பு – தென்காசி மாவட்ட கழகத் தலைவர் வழக்குரைஞர் த.வீரன், மாவட்டச் செயலாளர் கை.சண்முகம், மாவட்டக் துணைச் செயலாளர் அ.சவுந்தரபாண்டியன், கீழப்பாவூர் தலைவர் இராமசாமி, தொழில் வல்லுநர் பி.ஆர்.கே.அருண் ஆகியோர் முன்னிலையில் 10.8.2025 அன்று காலை 11 மணிக்கு கீழப்பாவூர் பெரியார் திடலில் நடைபெற்றது.

கழக காப்பாளர் சீ.டேவிட் செல்லத்துரை படத்தினை திறந்து வைத்து நினைவேந்தல் உரை நிகழ்த்தினார். திருநெல்வேலி மாவட்டத் தலைவர் ச.இராசேந்திரன் பொன்ராஜ் அவர்களின் கொள்கை உறுதியை அனைவரும் பின்பற்ற வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

கழக சொற்பொழிவாளர் இரா.பெரியார்செல்வன் பொன்ராஜ் அவர்களின் தனித்தன்மையை, பெரியார் தொண்டர்களின் போர்க்குணத்தையும் நம்மையெல்லாம் வழிநடத்தும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் ஓய்வறியா பேருழைப்பை விளக்கியும் சிறப்பாக உரையாற்றினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *