தூத்துக்குடி மாவட்ட மீனவ ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு 19ஆம் தேதி நடைபெறுகிறது!

1 Min Read

தூத்துக்குடி, ஆக.11- தூத்துக்குடி மாவட்ட காவல்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தூத்துக்குடி மாவட்ட ஊர்க் காவல் படையில் காலியாக உள்ள 20 மீனவ இளைஞர் ஊர்காவல் படையினரின் பணியிடங்களை நிரப்ப வருகின்ற 19.8.2025 அன்று தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலக மைதானத்தில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை தேர்வு நடைபெற உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த உடல் தகுதியுடன் உள்ள 18 வயதிற்கு மேற்பட்ட 50 வயதிற்கு உட்பட்ட நீச்சல் தெரிந்த ஆண்கள் மேற்சொன்ன தேர்வில் கலந்து கொள்ளலாம்.

தேர்வில் கலந்து கொள்பவர்கள் படிப்பு சான்றிதழ், வயது நிரூபணத்திற்கான சான்றிதழ், வேலை/தொழில் விபரத்துடன் கூடிய சுயவிபர குறிப்பு (Bio-Data), பாஸ்போர்ட் அளவு புகைப்படம் (2), அசல் சான்றிதழ், மீனவ இளைஞர் என்பதற்கான அடையாள அட்டை மற்றும் நகலுடன் வர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *