நாகர்கோவில் மாநகர பகுதியில் கழக திண்ணைப் பிரச்சாரம்

1 Min Read

நாகர்கோவில், ஆக. 10– குமரிமாவட்ட கழகம் சார்பாக நாகர்கோவில் மாநகரப் பகுதி மற்றும் ஓழுகினசேரி பகுதியில் திண்ணைப் பிரச்சாரம் நடைபெற்றது. பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் உ.சிவதாணு தலைமை தாங்கினார்.

மாவட்டச் செயலாளர் கோ.வெற்றி வேந்தன் பரப்புரையைத் தொடங்கி வைத்தார். கழக மாவட்டத் தலைவர் மா.மு.சுப்பிரமணியம், பொதுக்குழு உறுப்பினர் மு.இராஜசேகர், அகில இந்திய முற்போக்கு பேரவை மாநில துணைத் தலைவர் எஸ்.சுந்தரம், கழக இலக்கிய அணி செயலாளர் பா.பொன்னுராசன், மாவட்ட கழக துணைச் செயலாளர் எஸ்.அலெக்சாண்டர், , மாவட்ட மகளிர் பாசறை தலைவர் மஞ்சு குமார், கழக அகஸ்தீஸ்வரம் ஒன்றிய செயலாளர் எஸ்.குமார தாஸ்கோட்டாறு பகுதி தலைவர் ச.ச.மணிமேகலை, குமரி நகர செயலாளர் க.யுவான்ஸ், தோழர்கள் எ.ச.காந்தி, இரா. முகிலன் மற்றும் ஏராளமான தோழர்கள் பங்கேற்றனர்.

தந்தை பெரியாருடைய கொள்கை நூல்கள், கல்வி வள்ளல் காமராசர் பேசிய பகுத்தறிவு சிந்தனைகள் அடங்கிய துண்டறிக்கை கழக தலைவர் கி.வீரமணி அவர்களுடைய நூல்கள் மக்களுக்கு வழங்கப்பட்டன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *