நாய்க்கு இருப்பிடச் சான்று வழங்கிய பீகார் அரசிடம் டிரம்புக்கு இருப்பிடச் சான்று கோரி விண்ணப்பம்

1 Min Read

பாட்னா, ஆக. 9- பீகாரில் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர் அட்டையை சரிபார்ப்பதற்கு இருப்பிடச் சான்றிதழ் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, மாநிலம் முழுவதும் இணைய வழியில் இருப்பிடச் சான்றிதழ் கோரி விண் ணப்பித்து வருகின்றனர்.

அந்த வகையில், பாட்னாவில் பாபு என்ற பெயரில் ஒரு நாய் புகைப்படத்துடன் இருப்பிடச் சான்றிதழ் வழங்கப்பட்டது. பின்னர், அந்தச் சான்றிதழ் ரத்து செய்யப்பட்டது. மேலும், விண்ணப்பித்தவர், சான்றிதழ் வழங்கிய அதிகாரி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்தச் சூழ்நிலையில், சமஸ்திபூர் மாவட்டத்தில் டொனால்டு ஜான் ட்ரம்ப் என்பவர் இருப்பிடச் சான்றிதழ் கோரி விண்ணப்பித்திருந்தார். ஜூலை 29ஆம் தேதியிட்ட அந்த விண்ணப்பத்தில் தந்தை பெயர் பிரடெரிக் கிறிஸ்ட் ட்ரம்ப் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அத்துடன் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் புகைப்படம் மற்றும் போலி ஆதார் கார்டு ஆகியவை பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தன. இந்த விண்ணப்பத்தை மொஹியுதீன் நகர் வருவாய் அதிகாரி பரிசீலித்து கடந்த 4ஆம் தேதி நிராகரித்தார்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மாநில அரசின் டிஜிட்டல் நிர்வாக நடைமுறையை கேள்விக்குரியதாக ஆக்கவும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியை தவறாக வழிநடத்தவும் சிலர் முயற்சிப்பதாக மாவட்ட நிர்வாகம் குற்றம்சாட்டி உள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த விடுதலை வாசகர்களே, சகோதர, சகோதரிகளே, பெரியார் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேட்டாக திகழ்ந்து வரும் "விடுதலை" நம்முடையது.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம், ஒரு கருவி. இந்த விடுதலைப் பணியைத் தொடர, ஒலிக்க வைக்க, உங்கள் பொருளாதார பங்களிப்பு அத்தியாவசியமானது. பெரியார் விதைத்த பகுத்தறிவின் விதையை, நீங்கள் உரமிட்டு வளர்க்க வேண்டுகிறோம். உங்கள் நன்கொடையை அனுப்பவும். விடுதலைக்கு உரமிடுங்கள்!

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. ஒவ்வொரு ரூபாயும் பகுத்தறிவின் சுடரை ஒளிர வைக்கும்.

பெரியார் வாழ்க! விடுதலை வளர்க!

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *