பெரியார் உலகத்திற்கு நிதியளித்தல் ‘கரிகால் சோழனுக்கு நிகர் யார்?’ துண்டறிக்கை இளைஞர் அணி சார்பில் விநியோகிப்பது கும்பகோணம் மாவட்டக் கலந்துரையாடலில் முடிவு

3 Min Read

கும்பகோணம், ஆக. 9- திராவிடர் கழக கும்பகோணம் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 05-08-2025 செவ்வாய் மாலை 6 மணிக்கு கும்பகோணம் பெரியார் மாளிகையில் நடைபெற்றது

குடந்தை மாநகரத் தலைவர் வழக்குரைஞர் ரமேஷ் அனைவரையும் வரவேற்பு உரையாற்றினார்

கும்பகோணம் மாவட்ட தலைவர் வழக்குரைஞர் கு.நிம் மதி மாவட்ட செயலாளர சு.துரைராஜ், மாவட்ட காப்பாளர் வை இளங்கோவன், பொதுக்குழு உறுப்பினர் தமிழ்மணி, மாவட்ட துணைத் தலைவர் வ. அழகுவேல், மாவட்டத் துணைச் செயலாளர் சரவணன் ஆகியோர் முன்னிலை ஏற்று உரையாற்றினர்

கும்பகோணம் ஒன்றிய தலைவர் கோவி மகாலிங்கம், பேராசிரியர் பாலகிருஷ்ணன், மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் ஜில்ராஜ், பெரியார் பெருந்தொண்டர் சேக்கிழார், மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் பெரியார் கண்ணன், சோழபுரம் மதியழகன், குடந்தை ரியாஸ், திருவிடைமருதூர் ஒன்றிய செயலாளர் முருகேசன், திருவிடைமருதூர் ஒன்றிய துணைத் தலைவர் முருகானந்தம், மாவட்ட தொழிலாளர் அணி துணைத் தலைவர் சிவக்குமார், உப்பிலாம்பாடி வரதராஜன், திருவிடைமருதூர் ராதாகிருஷ்ணன், திருநாகேஸ்வரம் விஜயகுமார், மாவட்ட இளைஞரணி தலைவர் தமிழ்வேந்தன், மாநகர செயலாளர் பேராசிரியர் சிவக்குமார், மாவட்ட மகளிர் அணி தலைவர் திரிபுரசுந்தரி, அம்பிகா, இந்திரா உள்ளிட்ட கழக பொறுப்பாளர்கள் ஆகியோர் கருத்துரை ஆற்றினர்

திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார் இயக்க செயல் பாடுகள் குறித்தும் பெரியார் உலகம் நிதி திரட்டுதல் அவசி யம், தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவை எழுச்சியுடன் கொண்டாடுவது விடுதலை சந்தாக்களை புதுப்பித்து வழங்கிட வேண்டும் செங்கல் பட்டு மறைமலைநகரில் நடை பெறும் சுயமரியாத இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் குடும்பத்துடன் பங்கேற்பதின் அவசியம் இளைஞரணி சார்பில் ‘கரிகால் சோழனுக்கு நிகர் யார்?’ துண் டறிக்கை விநியோகம், பெரியார் சமூக காப்பு அணியில் இளைஞர்கள் மாணவர்களை அதிகம் பங்கேற்கச் செய்வது, ஆசிரியர் அவர்களின் அளப் பரிய உழைப்பால் கிடைத்திட்ட பலன்கள் குறித்து தலைமை உரையில் குறிப்பிட்டார்

மாநகரச் செயலாளர் பேராசிரியர் சிவக்குமார் நன்றி கூறினார்.

தீர்மானங்கள்

கும்பகோணம் மாவட்டத்தில் முடிவுற்ற விடுதலை சந்தாக்களை புதுப்பித்தும், புதிய சந்தாக்களை சேர்க்கும் பணியில் கழக தோழர்கள் அனைவரும் இணைந்து பணியாற்றுவது என முடிவு செய்யப்படுகிறது.

“உலகம் பெரியார் மயம் – பெரியார் உலகமயம் என்ற உயர்ந்த நோக்கத்தோடு திருச்சி சிறுகனூரில் ரூ.100 கோடியில் அமைய உள்ள பெரியார் உலகத்திற்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வேண்டுகோளை ஏற்று கும்பகோணம் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் நிதித் திரட்டி வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.

2025 அக்டோபர் 4 அன்று செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் தமிழ்நாடு முதலமைச்சர் சமூக நீதி காத்த சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கும் சுயமரியாதை இயக்கம் நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் தனிப் பேருந்தில் அதிகமான கழகத் தோழர்கள் அனைவரும் குடும்பத்துடன் பங்கேற்று சிறப்பிப்பது என முடிவு செய்யப்படுகிறது.

தந்தை பெரியார் 147ஆவது பிறந்த நாள் மற்றும் செங்கல்பட்டு சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டை விளக்கி நகர மெங்கும் மற்றும் புறவழிச்சாலை நெடுகிலும் சுவரெழுத்து மற்றும் சுவரொட்டி பிரச்சாரம் செய்வது என முடிவு செய்யப்படுகிறது.

ஆகஸ்ட் 16,17 தஞ்சாவூரில் நடைபெறும் பெரியார் சமூக காப்பு அணி பயிற்சி யில் கும்பகோணம் மாவட்டத் திலிருந்து இளைஞர்கள் மாண வர்களை பங்கேற்கச் செய்வது என முடிவு செய்யப்படுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *