தஞ்சையில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை வீ.அன்புராஜ் தொடங்கி வைத்து உரை

2 Min Read

அரசியல்

தஞ்சை, ஜூன்10- திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சி பட்டறை 10.06.2023 அன்று காலை 10.00 மணியளவில் தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம், ராமசாமி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. 

இந்நிகழ்வின் தொடக்கவிழா மாவட்ட காப்பாளர் மு.அய்யனார் தலைமையில் நடை பெற்றது.  மாநகர தலைவர் பா.நரேந்திரன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். 

மாணவர் கழக மாநில செயலாளர் இரா.செந்தூரப் பாண்டியன், தலைமை கழக அமைப்பாளர் குடந்தை க.குருசாமி, மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. குணசேகரன் ஆகியோர் முன்னிலை ஏற்று உரையாற்றினர். 

திராவிடர் கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் தொடங்கி வைத்து உரையாற் றினார். 

மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெய குமார் பெரியாரியல் பயிற்சி பட்டறையை ஒருங்கிணைத்து நடத்தினார்.

தஞ்சை மாவட்ட தலைவர் சி.அமர்சிங் இப்பயிற்சி பட்டறைக்கான முழு ஏற்பாடுகளையும் செய்து, நிகழ்வில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

பயிற்சிப் பட்டறையில் மாணவர்கள், இளைஞர்கள் 90 பேர் பங்கேற்றனர்.

இந்நிகழ்வில் மாவட்ட காப்பாளர் ஜெய ராமன், மாநில பக ஊடகப்பிரிவு தலைவர் மா.அழகிரிசாமி,  மாநில ப.க. துணை தலைவர் கோபு. பழனிவேல், மாவட்ட செயலாளர் அருணகிரி, மாவட்ட துணை செயலாளர் உத்திராபதி, மாநில இளைஞர் அணி துணை செயலாளர் இரா.வெற்றிக்குமார், மாநகர செயலாளர் டேவிட், மாநில இளைஞரணி துணை செயலாளர் வே.ராஜவேல், மாநில வீதி நாடக கலை குழு அமைப்பாளர் பி.பெரியார் நேசன் , திருவையாறு ஒன்றிய தலைவர் சா.கண்ணன், செயலாளர் துரை. ஸ்டாலின், பூதலூர் ஒன்றிய தலைவர் அள்ளூர் பாலு, செயலாளர் ஏ புகழேந்தி, ஒன்றிய ப க செயலாளர் இரா வீரக்குமார், மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் சந்துரு, மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் அஞ்சுகம், மாவட்ட மகளிர் அணி பொறுப் பாளர் கலைச்செல்வி, மாவட்ட பகுத்தறி வாளர் கழக துணைத் தலைவர் பெரியார் கண்ணன், காளியமங்கலம் ராஜேந்திரன், மாநகர அமைப்பாளர் செ. தமிழ்ச்செல்வன், அம்மன் பேட்டை கலியபெருமாள், மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் ச. அழகிரி, எம்.எஸ். கலியபெருமாள், மாவட்ட பகுத்தறி வாளர் கழக துணை செயலாளர் ஆ.லெட்சு மணன் மற்றும் கழக பொறுப்பாளர்கள் தோழர்கள் கலந்து கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *