திராவிடர் இயக்க தீரர் கடலூர் கி.கோவிந்தராசன் அவர்களின் நினைவு நாள்!

1 Min Read

அரசியல்

கடலூரில் தென்னிந்திய நல உரிமைச் சங்கம், திராவிடர் கழகம், சுயமரியாதை இயக்கக் காலம் தொட்டு, தொண்டறம் தொடர்ந்த தி.மு.க. மேனாள் துவக்க உறுப்பினரும், நகரச் செயலாளர், அவைத் தலை வராக 40 ஆண்டுகள் பணி புரிந்தவரும், நேருவுக்கு கருப்புக்கொடி, மும்முனைப் போராட்டம், இந்தி எதிர்ப்புப் போராட்டம், விலைவாசி உயர்வு எதிர்ப்பு போராட்டம் ஆகிய இப்போராட்டங்களில் பங்கேற்று கடுங்காவல் சிறை தண்டனை பெற்றவர்.

தந்தை பெரியாரின் சீடராக – பேரறிஞர் அண்ணாவின் தம்பியாக – தலைவர் கலைஞரின் உற்ற உடன்பிறப்பாக விளங்கியவர்.

தலைவர்  கலைஞர் அவர்களின் கரத்தால் மிதிவண்டி பரிசு பெற்று, “அடிமட்டத் தொண்டனை கழகம் மதிக்கத் தவறாது” என தலைவர் கலைஞரால் பாராட்டப்பட்டவர்.

பல்வேறு திராவிடர் இயக்கப் போராட்டங்களில் ஈடுபட்டுச் சிறை சென்றவருமான, கடலூர் கி.கோவிந்தராசன் (மறைவு: 10.6.1998) அவர்களை நினைவு கூர்கிறோம்.

கி.கோவிந்தராசன் குடும்பத்தினர், கி.தண்டபாணி குடும்பத்தினர், கி.வீரமணி – மோகனா குடும்பத்தினர்.

குறிப்பு: இவர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் மூத்த அண்ணன் ஆவார். 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *