தாழ்த்தப்பட்டோருக்கான உள் இடஒதுக்கீடு நீதிபதி நாகமோகன்தாஸ் அறிக்கை கருநாடக அமைச்சரவையில் தாக்கல்

1 Min Read

பெங்களூரு, ஆக.8 தாழ்த்தப்பட்டோருக்கான உள் இடஒதுக்கீடு தொடா்பான நீதிபதி நாகமோகன்தாஸ் அறிக்கை, கருநாடக அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

பெங்களூரு விதான சவுதாவில் நேற்று (7.8.2025) முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் கருநாடக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சட்டத் துறை அமைச்சா் எச்.கே.பாட்டீல் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தாழ்த்தப்பட்டோருக்கு உள் இடஒதுக்கீடு வழங்குவது தொடா்பாக கருநாடக உயா்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி எச்.என்.நாகமோகன்தாஸ் தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையம், அறிவியல்ரீதியாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட 1,766 பக்கங்கள் கொண்ட அறிக்கையை அரசிடம் அளித்துள்ளது.  92 சதவீத தாழ்த்தப்பட்ட மக்களிடம் குறுகிய காலத்தில் இக்கணக்கெடுப்பு முடிக்கப்பட்டு அதன் அறிக்கை, கருநாடக அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட்டது. அதன் நகல், அனைத்து அமைச்சா்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை மீது ஆக.16 ஆம் தேதி நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும். அறிக்கையை இன்னும் முழுமையாக படிக்காததால், அதன் விவரங்கள் தெரியவில்லை என்றார்.

கருநாடகத்தில் தாழ்த்தப்பட்டோ ருக்கு 17 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இது 101 தாழ்த்தப்பட்ட ஜாதிகளிடையே உள் இடஒதுக்கீட்டின் அடிப் படையில் பகிர்ந்தளிக்கப்பட உள்ளது. நாகமோகன்தாஸ் அறிக்கையின் அடிப்படையில் 17 சதவீத இட ஒதுக்கீட்டில் இடங்கை தாழ்த்தப்பட்டோருக்கு (மாதிகா) 6 சதவீதம், வலங்கை தாழ்த்தப்பட்டோருக்கு (ஹொலெயா) 5 சதவீதம், தீண்டும் ஜாதிகளுக்கு 4 சதவீதம், மிகவும் பின்தங்கிய தீண்டாமை ஜாதிகளுக்கு ஒரு சதவீதம், ஆதிகருநாடகம், ஆதி திராவிடா், ஆதி ஆந்திரம் ஜாதிகளுக்கு ஒரு சதவீதம் என்ற அடிப்படையில் உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.  தாழ்த்தப்பட்டோருக்கு வழங்கப்பட்டுள்ள இடஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு அளிக்கலாம் என்று கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *