டிரம்ப்-புதின் அடுத்த வாரம் சந்திப்பு உக்ரைன் போர் முடிவுக்கு வருமா?

2 Min Read

மாஸ்கோ, ஆக.8- உக்ரைன் போர் நெருக்கடிக்கு மத்தியில் டிரம்ப், புதின் இருவரும் அடுத்த வாரம் சந்தித்து பேச உள்ளனர்.

பேச்சு வார்த்தை

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இதை முடிவுக்கு கொண்டு வருவதில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தீவிரமாக உள்ளார்.ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்த இரு தரப்பிலும் தீவிர பேச்சுவார்த்தை நடத்திவருகிறார்.

ரஷ்யாவுக்கு கெடு

இதற்கு உக்ரைன் தரப்பில் ஒப்புக்கொண்டபோதும், ரஷ்யா இன்னும் இறங்கி வரவில்லை.

எனவே அந்த நாடு மீது அதிக பொருளாதார தடையை விதிக்க டிரம்ப் முடிவு செய்துள்ளார். இதற்காக இன்று (8.8.2025) வரை ரஷ்யாவுக்கு அவர் கெடு விதித்து உள்ளார்.

இதற்கு மத்தியில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் பேச்சுவார்த்தை நடத்த டிரம்பின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட் காப் மாஸ்கோ சென்றார். அவர் 6.8.2025 அன்று புதினை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார்.

புதின், டிரம்ப் இருவரும் சந்தித்து பேசுவது என முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கு ரஷ்ய அதிபர் புதின் ஒப்புதல் அளித்து உள்ளார்.அதன்படி இந்த சந்திப்பு அடுத்த வாரம் நடைபெற வாய்ப்பு இருப்பதாக புதினின் வெளியுறவு ஆலோசகர் யுரி உஷாகோவ் தெரிவித்தார். எனினும் சந்திப்பு நடைபெறும் இடம் குறித்து அவர் தெரிவிக்க வில்லை.

இது குறித்து அவர், ‘முதலில் டிரம்புடன் ஒரு இருதரப்பு சந்திப்புக்கு ஏற்பாடு செய்வது என நாங்கள் பரிந்துரைத் தோம். இந்த சந்திப்பு மிகவும் வெற்றிகரமாகவும், ஆக்கப்பூர்வமாகவும் இருக்கும் என நம்புகிறோம்’ என தெரிவித்தார்.

புதின் அறிவிப்பு

இந்த நிலையில் டிரம்புடனான சந்திப்பு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த வாய்ப்பு இருப்பதாக புதின் அறிவித்துஉள்ளார்.அமீரக அதிபர் ஷேக் முகமது பின் ஜாயித் அல் நஹ்யானை கிரெம்ளின் மாளிகையில் நேற்று (7.8.2025) சந்தித்து பேசியபின் இந்த அறிவிப்பை அவர் வெளி யிட்டார்.

இந்த சந்திப்புக்கான பரிந்து ரையை யார் வைத்தது? என்ற கேள்விக்கு, ‘அது முக்கியமில்லை, இரு தரப்பும் ஆர்வத்தை வெளி யிட்டன’ என புதின் கூறினார்.

எதிர்கால பேச்சுவார்த்தை களில் ஜெலன்ஸ்கியின் பங்கேற் புக்கான சாத்தியம் குறித்த கேள்விக்கு, ‘நான் அதற்கு எதிராக இல்லை என்பதை பலமுறை தெரிவித்து விட்டேன். இது சாத்தியமானதுதான். ஆனால் அதற்கு சில நிபந்தனைகள் உள்ளன’ என்றும் பதிலளித்தார்.

உக்ரைன் போருக்கு மத்தியில் அமெரிக்கா மற்றும் ரஷ்யா தலைவர்கள் சந்தித்து பேசுவது போரை முடிவுக்கு  கொண்டு வருமா? என பன்னாட்டு அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

டிரம்ப் 2ஆவது முறையாக அமெரிக்க அதிபராக பதவியேற்ற பின் புதினை சந்திப்பது இது முதல் முறையாகும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *